கர்த்தருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை (UK Lockdown - Day 76)

கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை (சங் 34:9)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது “கர்த்தருக்குப் பயந்திருங்கள், அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை” என்று. 

பிரியமானவர்களே இங்கே “கர்த்தருக்குப் பயந்திருங்கள்” என்பதுக்கு “கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்திருங்கள்” என்று அர்த்தம். 

ஆம் பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிற பிரகாரம் நாம் நம்முடைய வாழ்க்கையில் எல்லாப் பகுதிகளிலும் கர்த்தருக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவரை நம்முடைய வாழ்க்கையில் கனப்படுத்தும் போது கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் எந்த நன்மையும் குறைவு படாத வண்ணம் நடத்தி செல்ல அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! 

கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.


Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?