கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா (UK Lockdown - Day 79)

கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா (சங் 127:2)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, சாலமோன் இஸ்ரவேலை ஆட்சி செய்த நாட்களில், தேசத்தை எதிராளிகளிடமிருந்து பாத்துகாத்துக் கொள்ள அவர் “விழித்திருந்து காவல் காக்கும் காவலாளிகளை” தேசத்தில் நியமித்திருந்தார். 

ஆனால் இங்கே அவர் சொல்லுகிறார் “கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா” என்று. அல்லேலூயா! 

பிரியமானவர்களே, சாலமோன் நன்கு அறிந்திருந்தார் தேசத்தை பாதுகாக்க  “விழித்திருந்து காவல் காக்கும் காவலாளிகள்” நியமிக்கப்பட்டிருந்தாலும் கர்த்தருடைய உதவியில்லாமல் எந்த காவலாளராலும் தன்னுடைய தேசத்தை காவல் காக்க முடியாதென்றும், கர்த்தரே தன்னுடைய தேசத்துக்கு காவலாளியாக இருக்கிறார் என்றும் அவர் விசுவாசித்தார். அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, இன்றைக்கு நாம் வாழுகிற தேசத்திலும் தேசத்தை “பாதுகாக்கும் படையினர்” நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் ஆனால் கர்த்தர் நகரத்தைக் காவாராகில் தேசத்தை யாராலும், எந்த படையினராலும் தேசத்தை பாதுகாத்துக் கொள்ள முடியாது, அது விருதாவாக போய் விடும், கர்த்தருடைய உதவியில்லாமல் யாராலும், தேசத்தை காக்கவும்t முடியாது, எந்த மருத்துவர்களாலும் கர்த்தருடைய உதவியில்லாமல் நோயாளிகளை காப்பாற்றவும் முடியாது. அல்லேலூயா ! 

கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 


Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?