Posts

Showing posts from April, 2020

God is great, and we do not know Him

Image
Behold, God is  great, and we  do not know  Him (Job 36:26)

தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது (UK Lockdown - Day 38)

Image
இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது (யோபு 36:26) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவன் மகத்துவமுள்ளவர்,  தேவன் சர்வ வல்லமையுள்ளவர், அவருடைய கிரியைகள் மகத்துவமானவைகளாக இருப்பதோடு, அவருடைய கிரியைகள் ஒவ்வொன்றிலும் ஒழுங்கும், கிரகமும், பரிபூரணமும், அழகும் நிறைந்திருக்கும். அவருடைய கிரியைகளை எந்த மனுஷனானாலும் பரிபூரணமாய் அறிந்து கொள்ள முடியாது, அவருடைய செயல்கள் மனுஷனுடைய அறிவுக்கும், ஞானத்துக்கும் அப்பாட்பட்டவைகளாக இருக்கின்றது. அல்லேலூயா !  பிரியமானவர்களே, அவரைக் குறித்தும், அவருடைய மகத்துவங்களைக் குறித்தும் நாம் நன்கு அறியாததினால் தான் நாம் சில  சமயங்களில் நம்முடைய வாழ்க்கையில் காரியங்கள் நாம் எதிர்பார்க்கும் விதத்தில் நடக்காத பட்ச்சத்தில் தேவனைக் குறை சுமத்திக் கொண்டுஇருக்கின்றோம்.  பிரியமானவர்களே, இதனால் தான் இன்று அநேகர் கொரோனாவுக்காக தேவனை குற்றம் சுமத்

My King who does salvation in the Midst of the Earth (UK Lockdown - Day 37)

For God is my King from of old, Working salvation in the midst of the earth (Ps 74:12)

பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற என்னுடைய ராஜா (UK Lockdown - Day 37)

Image
பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா (சங் 74:12) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, சங்கீதக்காரன் தேவனைக் குறித்துச் சொல்லும் போது “பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற என்னுடைய ராஜா” என்று சொல்லுகிறார்.  பிரியமானவர்களே, ராஜா என்பதன் அர்த்தம் தேசத்தை பாதுகாப்பவர், அல்லது தேச ஜனங்களை விடுவிப்பவர்.  ஆம் பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பூலோகத்தில் வாழும் ஜனங்களுக்கெல்லாம் ராஜாவாக இருக்கிறார், அவர் அவரை நம்புகிற ஜனங்களை பாவத்திலிருந்து, தீமையிலிருந்து இரட்சிக்கிறவராக இருக்கிறார். அல்லேலூயா !  பிரியமானவர்களே, நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, உங்களுடைய பாவங்களை அறிக்கை செய்து, அவரை உங்களுடைய ஆண்டவராக உங்களுடைய வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளும் போது அவர் உங்களுக்கு  ராஜாவாக இருந்து உங்களை உங்களுடைய பாவங்க
Image
Whenever I am afraid, I will trust in You. In God I will praise His word, In God I have put my trust; I will not fear. What can flesh do to me? (Ps 56:3-4)

தேவனை நம்பியிருக்கிறேன், நான் கொரோனா தொற்றுக் கிருமிக்கு பயப்படேன்; கொரோனா கிருமி எனக்கு என்ன செய்யும்? (UK Lockdown - Day 36)

Image
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன், தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?  (சங் 56:3-4)  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். என்னுடைய தேவ செய்திகளை படித்துக் கொண்டிருக்கிற நீங்கள் ஒருவேளை நினைக்கலாம் ஏன் நான் தாவீதைப் பற்றி அதிகமாய் இந்நாட்களில் எழுதுகிறேன் என்று. பிரியமானவர்களே, நீங்கள் ஒரு காரியத்தை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும், நாம் ஆர்த்திக்கிற தேவன் ஜீவனுள்ளவர், அவர் எங்களோடு சமயத்துக்கு ஏற்ற வார்த்தைகளோடு பேசுகிறவர் என்று, ஆதலால் நான் தாவீதைப் பற்றி அதிகமாய் இந்நாட்களில் எழுதுகிறேன் என்று அல்ல, உண்மையில் எனக்குள் வாழும் பரிசுத்த ஆவியானவர் தாமே என்னை இந்நாட்களில்  தாவீதைப் பற்றி அதிகமாய் எழுத தூண்டுகிறார் என்பதே உண்மை. தேவனுக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா !  பிரியமானவர்களே, தாவீது வாழ்க்கையில்

He shall not be afraid of bad news,his heart is firm,trusting in the Lord (UK Lockdown - Day 35)

Image
He shall not be afraid of evil tidings / bad news,his heart is fixed / steadfast / firm, trusting in the Lord (Ps 112:7)

துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும் (UK Lockdown - Day 35)

Image
துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும் (சங் 112:7) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, செய்தித் தாள்கள் மூலமாகவும், இணையத் தளத்தின் மூலமாகவும், தொலைக்காட்சியின் மூலமாகவும் கொரோனா தொற்றுக் கிருமியினால் மரிக்கும் ஜனங்களின் தொகைகளை அறிந்து கொண்டிருக்கிற அநேகருடைய இருதயம் இந்நாட்களில் சோர்ந்து போய், தங்களையும் இந்த கொள்ளை நோயாகிய கொரோனா தாக்கி, தாங்களும் கொரோனாவினால் மரித்துப் போய் விடுவோம்  என்று பயந்து போய் இருக்கிறார்கள்.  பிரியமானவர்களே, நீங்களும் கொரோனாவினால் மரிப்பவர்களின் துர்ச்செய்தியை (Bad news) இந்நாட்களில் கேட்பதினால் பயந்து போய் இருக்கிறீர்களா?  பிரியமானவர்களே, தேவனுடைய வசனம்  சொல்லுகிறது “அவன் துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்” என்று. அல்லேலூயா !  ஆம் பிரியமானவ

God who prolongs the days of life (UK Lockdown - Day 34)

Image
The fear of the Lord prolongs days (Pro 10:27)

ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும் தேவன் (UK Lockdown - Day 34)

Image
கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும் (நீதி 10:27) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது “கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்” என்று.  முதலில் “கர்த்தருக்குப் பயப்படுதல்” என்பதன் அர்த்தம் என்ன என்பதை வேத வசனத்தின் படி ஆராய்ந்து பார்ப்போம். ஆதியாகமம் 22 ம் அதிகாரம் 12 ம் வசனத்தின் படி “கர்த்தருக்குப் பயப்படுதல்” என்பது தேவனுடைய/ கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிதல். அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார் (ஆதி 22:12) பிரியமானவர்களே, ஆயுசு நாட்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகின்றது? கர்த்தரே நம்முடைய ஜீவனுக்கு அதிபதி, அவ

Because You (Lord) have been my help, I will rejoice in the shadow of Your wings (UK Lockdown - Day 33)

Image
Because You have been my help, Therefore in the shadow of Your wings I will rejoice (Ps 63:7)

நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன் (UK Lockdown -Day 33)

Image
நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன் (சங் 63 :7). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது இந்த சங்கீதத்தை யூதாவின் வனாந்திரத்தில் இருக்கையில் பாடினார். பிரியமானவர்களே, தாவீதுக்கு வாழ்க்கையில் அவருடைய எதிரிகளினால் உயிர் ஆபத்து உண்டான போதெல்லாம் அவர் தேவனையே சார்ந்து வாழ்ந்தார், அதனால் தேவனும் அவரை ஒவ்வொரு முறையும் எதிரிகளின் கைக்கு விலக்கிப் பார்த்துகாத்துக் கொண்டே வந்தார், அதனால் தான் அவர் சொல்லுகிறார் “நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்” என்று. அல்லேலூயா ! பிரியமானவர்களே, தேவன், தாவீதை அவருடைய எதிரிகளின் கைக்கு விலக்கிப் பாதுகாத்தது போல் இன்று எங்களையும் தேவன் எத்தனையோ ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொண்டு வருகிறார். ஆனால் வாழ்க்கையில் தாவீதை போல் நீங்களும், நானும் தேவனுக்கு நீர் எனக்குத் துணையாயிருந்ததின

Problem, prayer, Deliverance and thanks giving (UK Lockdown - Day 32)

Image
Psalms 116 1) The pains/sorrows of death surrounded me, And the pains of Sheol/ hell laid/got hold of me/hold upon me. I found trouble and sorrow (Ps 116:3) 2) Then I called upon the name of the Lord: "O Lord, I implore/beseech you,deliver my soul!”/ save me (Ps 116:4) 3) Gracious is the Lord, and righteous; Yes, our God is merciful (Ps 116:5) 4) For You have delivered my soul from death, My eyes from tears, And my feet from falling (Ps 116:8) 5) What shall I render to the Lord, For all His benefits toward me? I will take up the cup of salvation, And call upon the name of the Lord (Ps 116:12-13)

நெருக்கம், கர்த்தரை நோக்கி ஜெபம், நெருக்கத்திலிருந்து விடுதலை, கர்த்தருக்கு நன்றி (UK Lockdown - Day 32)

Image
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, இன்றைய தினத்தில் 116 சங்கீதத்தை தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம் பிரியமானவர்களே, எங்களுக்கு வாழ்க்கையில் நெருக்கங்களும், துன்பங்களும், வருத்தங்களும் வரும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தாவீதின் வாழ்க்கையிலிருந்து (சங் 116) நாம் இன்றைக்கு கற்றுக் கொள்ளுவோம்.  1) தாவீதுக்கு வாழ்க்கையில் நெருக்கங்கள் வந்தது. சங் 116:3 : மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்  2) தாவீதுக்கு நெருக்கங்கள் வந்த போது கர்த்தரை நோக்கி ஜெபிக்கிறார்  சங் 116:4 : அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன்  3) கர்த்தர் மனமிரங்கி தாவீதின் ஜெபத்தைக்  கேட்டு அவரை நெருக்கத்திலிருந்து விடுதலை செய்கிறார்  சங் 116:5 : கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனவுருக்கமானவர் சங் 116:8 : என் ஆத்துமாவை மரணத்துக்

Be strong and courageous (UK Lockdown - Day 31)

Image
Be strong and courageous; do not be afraid nor dismayed before the king of Assyria, nor before all the multitude that is with him; for there are more with us than with him. 8 With him is an arm of flesh; but with us is the Lord our God, to help us and to fight our battles.” And the people were strengthened by the words of Hezekiah king of Judah (2 Chro  32:7-8)

திடன்கொண்டு தைரியமாயிருங்கள் (UK Lockdown - Day 31)

Image
நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள், அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்,அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள் (2 நாளா 32:7- 8) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே,  ஆசீரியர்களினால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேல் ஜனங்கள் நெருக்கப்பட்டு அவர்களுக்குப் பயந்து, என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கிப் போய் இருந்த போது இஸ்ரவேலின் ராஜா எசேக்கியா இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து “நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள், அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும

The power and might are in the hand of God (UK Lockdown - Day 30)

Image
Power and might are in the hand of God (1 Chro 29:12) He has made the earth by His power, He has established the world by His wisdom, And has stretched out the heavens at His discretion (Jer 10:12)

தேவனுடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு (UK Lockdown - Day 30)

Image
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, இன்று பூலோகத்தில் வாழும் சில ஜனங்களுக்கு  உள்ளத்தில் எழுப்புகின்ற கேள்வி கடவுள் இருக்கிறார் என்றால் ஏன் அவரால் கொரோனா தொற்று கிருமியை அழிக்க முடியாமல் இருக்கின்றது என்று.  பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது,  (1 ) “தேவனுடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு” (1 நாளா 29 : 12 ) (2 ) “தேவன் பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்” (எரேமி 10 : 12 )  பிரியமானவர்களே, தேவனுடைய வல்லமையையும், அவருடைய கிரியைகளையும்  மனுஷனுடைய அறிவினாலும், ஞானத்தினாலும் புரிந்து கொள்ள முடியாது, அந்த அளவு தேவன் பெரியவராக இருக்கிறார். அவரால் முடியாதென்று சொல்லிக் கொள்ள ஒரு காரியமுமில்லை, அவர் சகலத்தையும் செய்ய வல்லமையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !  ஆகவே பிரியமானவர்களே, சோர்ந்து போகாதீர்கள் தொடர்ந்து தேவன் மீது உங்களுடைய விசுவாசத்தை வைத்து ஜெபத்தில் தரித்திருங்கள், தேவன் உங்களை கொரோனாவில்

God who doesn’t consider race, religion, color and status (UK Lockdown -Day 29)

Image
Then they cried out to the Lord in their trouble, And He delivered them out of their distresses (Ps 107:6)

இனம், மதம், நிறம், அந்தஸ்து பாராமல் எல்லா மனுஷர்களது கூப்பிடுதலையும் கேட்கும் ஆண்டவர் இயேசு (UK Lockdown - Day 29)

Image
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, இன்றைக்கு சங்கீதம் 107 இல் இருந்து நான்கு வசனங்களை தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார் (107:6) தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார் (சங் 107:13) தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார் (சங் 107:19) அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார் (சங் 107:28) பிரியமானவர்களே, இந்த நான்கு வசனங்களும் ஒன்றுக்கொன்று ஒத்தவைகளாக காணப்படுகின்றன. “தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்/ இரட்சித்தார்” ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்களுடைய தேவன் என்றும், அவர் கிறிஸ்தவர்கள

The Lord is your refuge and a stronghold during times of trouble (UK Lockdown Day 28)

Image
The Lord is a refuge for the oppressed, a stronghold in times of trouble (Ps 9:9)

நீங்கள் நெருக்கப்படுகிற காலங்களில் கர்த்தர் உங்களுக்கு அடைக்கலமாகவும், தஞ்சமாகவும் இருக்கிறார் (UK Lockdown Day - 28)

Image
சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர் (சங் 9:9). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம் வேதம் சொல்லுகிறது, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு  1 . அடைக்கலமானவர்.  பிரியமானவர்களே, கர்த்தர் தம்மை நம்புகிற, தம்மை அடைக்கலமாக கொண்டிருக்கிற ஜனங்களுக்கு அடைக்கலமாய் ( பாதுகாப்பாக) இருக்கிறார், கர்த்தருடைய அடைக்கலம் மிகவும் பலமுள்ளதாக இருப்பதினால் எந்த தீங்கும் அவர்களை அணுகுவதுமில்லை, சேதப்படுத்துவதுமில்லை, அவர்களை அவர் விசேஷித்த பாதுகாப்பினால் பாதுகாக்கிறார். அல்லேலூயா !  தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர் (சங் 46:1) 2 .  தஞ்சமானவர் பிரியமானவர்களே, கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு தஞ்சமானவர். அவர்கள்  நெருக்கப்படுகிற காலங்களில் அவர்களுக்கு அவர் தஞ்சமானவராக இருக்கிறபடியால் அவர்களை எந்த தீங்கும், ஆபத்தும் அணுகுவ

Jesus is the author of your life (UK Lockdown Day - 27)

Image
Oppressors/Ruthless/Violent people seek after my life (Ps 54:3)

இயேசுவே, உங்களுடைய பிராணனுக்கு அதிபதி (UK Lockdown - Day 27)

Image
கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள் (சங் 54:3) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.  பிரியமானவர்களே, இந்த 54 வது சங்கீதத்துக்கு “தாவீது தங்களிடத்தில் ஒளித்துக் கொண்டிருக்கிறான் என்று சிப்பூரார் வந்து சவுலுக்குச் சொன்ன போது, நெகினோத்தில் வாசிக்கத் தாவீது பாடின இராகத் தலைவனுக்கு ஒப்புவித்த மஸ்கீல் என்னும் சங்கீதம்” என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.  பிரியமானவர்களே, யூதாஸ் காரியோத்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்தான், யூதாவின் ஜனங்களாகிய சிப்பூரார் தாவீதைக் காட்டிக் கொடுத்தார்கள், இவர்கள் தாவீது எங்கே ஒளித்துக் கொண்டிருக்கிறார், அவரை எப்படி பிடிக்கலாம் என்று சவுலுக்கு ஆலோசனை சொன்னார்கள், அதனால் தான் “சிப்பூராரை” யூதாஸ் காரியோத்துக்கு அடையாளப்படுத்தி வேதப் பண்டீதர்கள் கூறுகிறார்கள்.  இவர்கள் இரண்டு முறை சவுலிடம் வந்து தாவீதைப் பிடிப்பதட்க்கு ஆலோசனை சொல்லுகிறார்கள்.  1 . பின்ப

Call upon Me in the day of trouble; I will deliver you (UK Lockdown - Day 26)

Image
Call upon Me in the day of trouble; I will deliver you (Ps 50:15)

ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன் (UK Lockdown Day - 26)

Image
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன் (சங் 50:15) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.  பிரியமானவர்களே, நீங்கள் கொரோனா கிருமியினால் நெருக்கப்பட்டு வாழ்க்கையில் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறீங்களா?  பயப்படாதீர்கள். தேவன் சர்வ ஞானமுள்ளவர், மனுஷர்களாகிய எங்களுக்கு ஒரு நாள் ஆபத்து வரும் என்பதை அவர் அறிந்திருந்த படியால் தான் அவர் தீர்க்கதரிசனமாக எங்களுக்கு சொல்லியிருக்கிறார் “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்” என்று.  ஆகவே பிரியமானவர்களே, உங்களுடைய ஆபத்தான இந்த நாட்களில் தேவன் இயேசு கிறிஸ்து மீது உங்களுடைய விசுவாசத்தை வைத்து அவரை நோக்கிக் கூப்பிபிடுங்கள், அவர் உங்களை கொரோனாவுக்கும், எல்லாத் தீங்குக்கும் விலக்கிப் பாதுகாத்துக் கொள்ளுவார். வாக்குக் கொடுத்த தேவன் தனது வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவராக இருக்கிறார், பொய் சொல்ல அவர் மனுபுத்திரனல்ல. அ

Our days are in the hands of the Lord (UK Lockdown Day - 25)

Image
My times are in Your hand; Deliver me from the hand of my enemies, And from those who persecute me (Ps 31:15)

நம்முடைய ஆயுசு நாட்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கின்றது (UK Lockdown Day - 25)

Image
என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும் (சங் 31:15) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.  பிரியமானவர்களே, தாவீது சவுலினால் நெருக்கப்பட்டு, அவருடைய பிராணனுக்கு பயந்து ஒரு ஆபத்தான  சூழ்நிலையில் இருந்த போது, அவர் கர்த்தரை நோக்கி 31 வது சங்கீதத்தை விசுவாசத்தோடு பாடினார். பிரியமானவர்களே, தாவீது தன்னுடைய எதிரிகளினால் நெருக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான ஒரு சூழ்நிலையில் இருந்தது போல் இன்று இந்த பூலோகத்தில் வாழும் ஜனங்கள் எல்லாரும் கொரோனா கிருமியினால் நெருக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறார்கள். ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் உங்களுடைய  இந்த ஆபத்தான காலத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீது உங்களுடைய விசுவாசத்தை வைத்து அவரை நோக்கி  “ கர்த்தாவே, என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என்னை கொள்ளை நோயாகிய கொரோனா

The Lord who sustains us by night (UK Lockdown Day - 24)

Image
I lay down and slept; I awoke, for the Lord sustained me (Ps 3:5)

இராவேளையில் எங்களைத் தாங்கும் கர்த்தர் (UK Lockdown Day - 24)

Image
நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக் கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார் (சங் 3:5). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.  பிரியமானவர்களே, தாவீது தன்னுடைய மகன் அப்சலோமுக்கு பயந்து தன்னுடைய அரண்மனையை விட்டும், தன்னுடைய ராஜ்யத்தின் தலைநகரமாகிய எருசலேமை விட்டும் தப்பி ஓடிப் போகையில் மூன்றாம் சங்கீத்தைப் பாடினார். பிரியமானவர்களே, தாவீதுக்கு கர்த்தர் தன்னை தாங்குகின்றார், அவர் தன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிப் பாதுகாக்கிறார் என்கின்றதான நிச்சயம் அவர் உள்ளத்தில் இருந்தது, அதனால் தான் அவரைச் சுற்றிலும்  ஆபத்துக்கள் சூழ்ந்திருந்த போதும் அவர் பயமில்லாமல், சமாதானமாய் இரா வேளையில் நித்திரை செய்கிறார். அவர் சொல்லுகிறார் “நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்” என்று. அல்லேலூயா !  பிரியமானவர்களே, தாவீதை போல் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கும் இரா

The Lord protects those who love Him from evil (UK Lockdown - Day 23)

Image
The Lord preserves (keeps) all who love Him (Ps 145:20)

கர்த்தர் தம்மில் அன்பு கூறுகிறவர்களை தீங்குக்கு விலக்கிப் பாதுகாக்கின்றார் (UK Lockdown - Day 23)

Image
கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி (சங் 145:20).  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.  பிரியமானவர்களே, கர்த்தர் தம்மில் அன்பு கூறுகிற யாவரையும் எல்லா தீங்குக்கும் விலக்கிப் பாதுகாக்கிறார் என்பதை தாவீது தன்னுடைய வாழ்க்கையில் அனுபவரீதியாக அறிந்திருந்தார், அதனால் தான் அவர் சொல்லுகிறார் “கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றுகிறார்’ என்று.  “கர்த்தரிடத்தில் அன்பு கூறுவது” என்பதன் அர்த்தம் கர்த்தரை ஆராதிப்பதா?   பிரியமானவர்களே, கர்த்தரை ஆராதிப்பவர்களெல்லாம், கர்த்தரிடத்தில் மெய்யாகவே அன்புகூருபவர்களல்ல.  யாத்திராகமம் 20:6  இல் கர்த்தர் சொல்லுகிறார் “என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்” என்று.  ஆகவே பிரியமானவர்களே, கர்த்தரிடத்தில் அன்பு கூறுவதென்பதன் உண்மையான அர்த்தம் “கர்த்தரு

Is God responsible for Coronavirus Pandemic? UK (Lockdown - Day 22)

Image
You have laid me in the lowest pit, In darkness, in the depths (Ps 88:6) I am shut up, and I cannot get out (Ps 88:8b)

"Coronavirus Pandemic" க்கு தேவன் காரணரா? (UK Lockdown - Day 22)

Image
என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர் (சங் 88:6).  நான் வெளியே புறப்படக்கூடாதபடி அடைபட்டிருக்கிறேன் (சங் 88:8b) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, இன்றைய தினத்தில் சங்கீதம் 88 யை தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.  பிரியமானவர்களே,  “எண்பத்தெட்டாவது” சங்கீதம் ஒரு புலம்பலின் சங்கீதமாகும். ஆரம்பம் முதல் முடிவு வரை (வசனம் 1-18) முழுவதுமே புலம்பலாகவே இருக்கின்றது. இந்த சங்கீதத்தை “ஏமான்” எழுதியிருக்கிறார், அவரின் இருதயம் மனவேதனையினாலும், மனக்கலகத்தினாலும் நிறைந்திருக்கிறது, இவர் தன்னுடைய துக்கத்துக்கு, தான் இருக்கின்றதான இறுக்கமான, நெருக்கமான சூழ்நிலைக்கு தேவனே காரணம் என்று புலம்புகிறார். என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர் (சங் 88:6).  பிரியமானவர்களே, ஏமானைப் போல இன்று நம்மில் அநேகர் இப்போது நாம் இருக்கின்றதான சூழ்நிலைக்கு தேவனே காரணம், தேவன் ஒருவர் இருப்பாரென்றால்  அவரால் ஏன் இந்த Corona virus pandemic யை அழித்து, ஜனங்களை ஏன் அழிவிலிருந்து பாதுகாத்

The three" things that we should do, who we have seen the power of the enemy (Corona) (UK Lockdown - Day 21)

Image
Because of his strength will I wait upon thee: for God is my defence. The God of my mercy shall prevent me: God shall let me see my desire upon mine enemies (Ps 59:9-10) 

எதிரியின் (கொரோனாவின்) வல்லமையைக் கண்ட நாங்கள், அவனை முறியடிக்க செய்ய வேண்டிய “மூன்று” காரியங்கள் (UK Lockdown - Day 21)

Image
அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார் (சங் 59:9-10).  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.  பிரியமானவர்களே, தாவீதுக்கு வாழ்க்கையில் அநேக எதிரிகள் இருந்தது மாத்திரமல்ல, அவர்கள் எல்லாரும் உலகப்பிரகாரமாக பலசாலிகளாகவும் இருந்தார்கள். அவ்வாறு தாவீது தன்னுடைய எதிரியினால் வாழ்க்கையில் நெருக்கப்படும் ஒரு சூழ்நிலையின் போதே அவர் சொல்லுகிறார், “அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்”’என்று. அல்லேலூயா !  பிரியமானவர்களே, தாவீது தன்னுடைய எதிரியின் வல்லமையைக் கண்டு, அவருடைய  ஆபத்துக் காலத்தில்,   (1 ) தேவனுக்காக காத்திருந்தார் (2 ) தேவனை அவருடைய வாழ்க்கையில் உயர்ந்த அடைக்கலமாக கொண்டிருந்தார் (3 ) தேவன்

God who cares for you (UK Lockdown - Day 20)

Image
Now when she had said this, she turned around and saw Jesus standing there, and did not know that it was Jesus. 15 Jesus said to her, “Woman, why are you weeping? Whom are you seeking?” (Joh 20:14-15)

உங்களை விசாரிக்கும் தேவன் (UK Lockdown - Day 20)

Image
மகதலேனாமரியாள் இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள் (யோவா 20:14-15)  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு பேசின முதல் வார்த்தைகளை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.  பிரியமானவர்களே, தேவனுக்கு நம் கண்ணீர், நம் வேதனைகள் தெரியும். அதுமாத்திரமல்ல  அவர் எங்கள் ஒவ்வொருவர் மீதும் கரிசனையுள்ளவராகவும், எங்களை அவர் விசாரிக்கிறவராகவும் இருக்கிறார். அதனால் தான் அவர் உயிர்த்தெழுந்த பின்பு மகதலேனா மரியாளுக்கு அருகில் வந்து, “ஸ்திரீயே ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் ? என்று கேட்டார்.  பிரியமானவர்களே, இன்று நாம் போகின்றதான சூழ்நிலைகளை