Posts

Showing posts from March, 2020

God protects his people with his favor as with a shield (UK Lockdown Day 8)

Image
Surely, Lord, you bless the righteous; you surround (cover) them with your favor as with a shield (Ps 5:12)

காருணியம் என்னுங் கேடகத்தினால் பாதுகாக்கும் தேவன் UK Lockdown - Day 8

Image
கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர் (சங் 5:12)  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.  பிரியமானவர்களே, யுத்த வீரர்கள் யுத்தத்துக்குச் செல்லும் போது கேடகத்தை பயன்படுத்துவார்கள். தங்களுக்கு ஆபத்து எந்த பக்கத்திலிருந்து வருகின்றதோ அந்தப் பக்கமாக அவர்கள் தங்களுடைய கேடகத்தை திருப்பி தங்களை பாதுகாத்துக் கொள்ளுவார்கள். கேடகம் அவர்களை ஒரு நேரத்தில் ஒரு திசையில் மாத்திரமே பாதுகாக்கும்.  ஆனால் கர்த்தர் தன் மீது விசுவாசம் வைத்திருக்கிற தன்னுடைய பிள்ளைகளுக்கு    “காருணியம் என்னுங் கேடகத்தை” கொடுத்திருக்கிறார், கர்த்தருடைய காருணியம் என்னும் கேடகம் யுத்த வீரர்கள் பயன்படுத்தும் கேடகம் போல் ஒரு வேளையில் ஒரு திசையின் பக்கத்திலிருந்து பாதுகாப்பை அவர்களுக்கு கொடுக்காமல், அவர்களை ஒரே நேரத்தில் எல்லாத் திசைகளிலிருந்தும் பாதுகாக்கின்றது. அல்லேலூயா !  அவ்வ

Lord preserve me, For in you I put my trust UK Lockdown Day 7

Image
Preserve me (keep/protect), O God, for in You I put my trust (I take refuge) (Ps 16:1) 

தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன் UK Lockdown Day 7

Image
தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன் (சங் 16:1)  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.  பிரியமானவர்களே, சங்கீதம் 16ம் அதிகாரத்துக்கு மிக்தாம் என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது, மிக்தாம் என்னும் வார்த்தை பொற்பணதிக்கீதம் என்றும் அழைக்கப்படுகின்றது. பொற்பணதிக்கீதம் என்னும் வார்த்தைக்கு “பசும் பொன்னைப் போன்ற சுத்த கீதம்” அல்லது “சொக்கத் தங்கத்தைப் போன்று விலையேறப்பெற்ற கீதம்” என்று பொருள் சொல்லலாம். இந்த சங்கீதானது பசும் பொன்னைப் போல அதிக மதிப்புள்ளது.  தாவீது ஆபத்தான சூழ்நிலையில் இருந்த  போது அவர் தேவனை நோக்கி “தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்” என்று கதறி அழுதார். அவருடைய கூக்குரலின் சத்தத்தைக் கேட்ட தேவன் தாவீதை அவருடைய ஆபத்தான சூழ்நிலையிலிருந்து காத்துக் கொண்டார்.   பிரியமானவர்களே, இன்று இந்த பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஜனங்கள்  ஒவ்வொருவரும் தாவீத

Turn to the Lord your God with all your heart UK Lockdown - Day 6

Now, therefore,” says the Lord, Turn to Me with all your heart, with fasting, with weeping, and with mourning.” So rend your heart, and not your garments; Return to the Lord your God, For He is gracious and merciful, Slow to anger, and of great kindness; And He relents from doing harm (Joel 2:12-13)

தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள் UK Lockdown - Day 6

Image
ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார் (யோவே 2:12-13)  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, யூதா ஜனங்கள் கர்த்தருக்கு விரோதமாக பாவங்கள் செய்து அவரை விட்டு விலகி தூரமாய் இருந்த போது, கர்த்தர் யோவேல் தீர்க்கதரிசி மூலம் யூதா ஜனங்களோடு “நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள், நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக்கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்;

Pray for the people, for the leaders, for the doctors UK Lockdown - Day 5

Therefore I exhort first of all that supplications, prayers, intercessions, and giving of thanks be made for all men, for kings and all who are in authority, that we may lead a quiet and peaceable life in all godliness and reverence (1 Tim 2:1-2)

தேச மக்களுக்காகவும், தலைவர்களுக்காகவும், மருத்துவர்களுக்காகவும், ஜெபியுங்கள் UK Lockdown - Day 5

Image
எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும் ( 1 தீமோ 2:1- 2).  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, அப்போஸ்தலனாகிய பவுல் எபேசு பட்டணத்திலுள்ள சபையார் மத்தியில் ஊழியம் செய்த தீமோத்தேயுக்கு எழுதின நிரூபத்தில் “எபேசு சபையார் எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும், ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும் என்று சொல்லி விட்டு, விஷேசமாக  ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்” என்று புத்தி சொல்லுகிறார்.  காரணம் பவுல் மற்றும் தீமோத்தேயுவின்  காலத்தில் அதிகாரத்திலிருந்த அதிகாரிகள் புறஜாதியினராக இருந்தார்கள், அவர்கள் இஸ்ரவேலின்

Pray for the Nations UK Lockdown - Day 4

And seek the peace of the city where I have caused you to be carried away captive, and pray to the Lord for it; for in its peace you will have peace (Jer 29:7)

தேசங்களுக்காக ஜெபியுங்கள் UK Lockdown - Day 4

Image
நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும் (எரேமி 29 : 7 ) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனமானது எந்த சூழ்நிலையில் எழுதப் பட்டிருக்கின்றது என்று சற்று சுருக்கமாக பார்ப்போம். யூதா ஜனங்களும், எருசலேமின் குடிகளும்  கர்த்தரை மறந்து அவருக்கு விரோதமாக பாவம் செய்த போது, கர்த்தர் அவர்களை பாபிலோன் ராஜாவின் கைக்கு ஒப்புக் கொடுத்ததினால், அவன் இவர்களை சிறை கைதிகளாக  சிறைப்பிடித்துக்கொண்டு பாபிலோனுக்கு கொண்டு சென்றான். அங்கே அவர்கள் “கர்த்தருடைய நாமத்தில் கள்ள தீர்க்க தீர்க்கதரிசிகள் சொன்ன வார்த்தைக்கு செவி கொடுத்து, சீக்கிரமாய் தங்களுக்கு பாபிலோன் சிறையிருப்பிலிருந்து விடுதலை கிடைக்கப் போகின்றது என்று நம்பி, தாங்கள் சிறையிருப்பில் இருந்த பாபிலோன்

Three weeks (21 days) UK Lockdown - Day 3

those days I, Daniel, was mourning three full weeks.  I ate no pleasant food, no meat or wine came into my mouth, nor did I anoint myself at all, till three whole weeks were fulfilled (Dan 10:2-3)

மூன்று வார நாட்கள் (21 நாட்கள்) UK Lockdown - Day 3

Image
அந்த நாட்களில் தானியேலாகிய நான் “மூன்று வாரமுழுவதும்” துக்கித்துக்கொண்டிருந்தேன். அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை (தானி 10 : 2 - 3 ).  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.  பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனமானது எந்த சூழ்நிலையில் எழுதப் பட்டிருக்கின்றது என்று சற்று சுருக்கமாக பார்ப்போம்.  பாபிலோன் தேசத்திலுள்ள யூதர்கள் அனைவரும்  தங்களுடைய சொந்த தேசத்துக்குப் திரும்பி  போகலாம் என்று  பாபிலோன் ராஜா ஆணை பிறப்பித்திருந்தார், ஆனால் யூதர்களில் சிலர் மாத்திரமே பாபிலோன் தேசத்திலிருந்து யூதாவுக்கு திரும்பி போனார்கள், அநேகர் தங்களுடைய சொந்த தேசத்துக்கு திரும்பிப் போக மனமில்லாமல் பாபிலோன் தேசத்திலே தங்கி விடுகிறார்கள். பாபிலோன் தேசத்திலிருந்து

Who does God keep from evil? (UK Lockdown - Day 2)

Image
The Lord keep (protect/guard) you from evil (2 Thessa 3:3b)

தேவன் எப்படிப்பட்ட மனுஷர்களை தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார்? (UK Lockdown - Day 2)

Image
தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார் (2 தெசலோ 3:3b). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.  பிரியமானவர்களே, இன்றைக்கு தேவன் எப்படிப் பட்ட மனுஷர்களை தேவன் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார் என்று தியானித்துக் கொள்ளுவோம்.  (1) தேவ சித்தத்துக்குக் கீழ்ப்படிந்து, தேவனுடைய சித்தத்தை செய்பவர்களை தேவன் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார். யோசேப்பு, தாவீது   (2) தம்மீது விசுவாசம்/நம்பிக்கை வைத்திருக்கிறவர்களை தேவன் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார். மூன்று எபிரேய வாலிபர்கள், தானியேல், தாவீது (3) தமக்குப் பயந்து நடக்கிறவர்களை தேவன் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார். யோசேப்பு, தானியேல் (4) தமக்கு முன்பாக பரிசுத்தமாக ஜீவிப்பவர்களை தேவன் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுகிறார். தானியேல், யோசேப்பு  (5) தம்மை கனப்படுத்துகிறவர்களை தேவன் தீமையினின்று வ

Shut the doors behind you; hide yourselves for a ‘little while’ until his wrath has passed by (UK Lockdown - Day 1)

Image
Go, my people, enter your rooms and shut the doors behind you; hide yourselves for a little while until his wrath has passed by (Isa 26:20)

உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள் (UK Lockdown - Day 1)

Image
என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள் (ஏசா 26:20).  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.  பிரியமானவர்களே, ஏசாயா 26 ம் அதிகாரம் துதியின் கீதம் (26 :1-19) என்று அழைக்கப்படுகிறது.  பிரியமானவர்களே, அங்கும், இங்கும் வெளியிலே அலைந்து கொண்டிருந்தால், வெளியிலே இருக்கும் ஆபத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் சிக்கிக் கொண்டு விடுவார்கள் என்பதை மனதில் வைத்து அவர்களுடைய  பாதுகாப்புக்காக ஏசாயா தீர்க்கதரிசி “என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டு கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்” என்று அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கின்றார். பிரியமானவர்களே, வேத வசனம் நமக்கு அழகாய் சொல்லுகிறது  “உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்” என்று. ஆம் பிரியமானவர

The eye of the Lord is on those who fear Him, On those who hope in His mercy

Image
Behold, the eye of the Lord is on those who fear Him, On those who hope in His mercy, To deliver their soul from death, And to keep them alive in famine (Ps 33:18-19)

கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது

Image
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது (சங் 33:18-19) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் “தமக்கு பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கும் ஜனங்களுக்கு அவர் “ இரண்டு ஆசீர்வாதங்களை” கொடுப்பதுக்கு அவர்கள்மேல் அவர் கண்ணை நோக்கமாக வைத்திருக்கிறார். (1 ) அவர்களுடைய ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கிறார் ( 2 ) பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கின்றார் (1 ) அவர்களுடைய ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கிறார்  - பிரியமானவர்களே, மனுபுத்திரர் எல்லாருக்கும் மரணம் வரும், இது சரீர மரணம், எந்தவொரு மனுஷனும் தன்னை சரீர மரணத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியாது, கர்த்தர் மனுஷனுக்கு சரீர மரணத்தை நியமித்திருக்கிறபடியால் அ

I will put none of the diseases on you which I have brought on the Egyptians

Image
“If you diligently heed the voice of the Lord your God and do what is right in His sight, give ear to His commandments and keep all His statutes, I will put none of the diseases on you which I have brought on the Egyptians (Ex 15:26)

நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்

Image
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன் (யாத்தி 15:26) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.  பிரியமானவர்களே, மோசேயின் நாட்களில் தேவன் அவருடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்கு மேலே கூறப்பட்டுள்ள வாக்குத்தத்தத்தை கொடுத்தார்.  இன்றைக்கு யார் யாரெல்லாம் இயேசுவின் பரிசுத்த இரத்தத்தினால் கழுவப்பட்டு, அவரால் மீட்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் ஒவ்வொருவருக்கும் மேலே கூறப்பட்டுள்ள வாக்குத்தத்தமாது சொந்தமாக இருக்கின்றது.  பிரியமானவர்களே, “நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்” என்று வாக்குக் கொடுத்திருக்கிற தேவன் அவர் தனது வார்த்தையில் உண்மையுள்ளவராக இருக்கிறார், ஆனால்

O God, Be merciful to me

Image
Be merciful to me, O God (Ps 56:1)

தேவனே, எனக்கு இரங்கும்

Image
தேவனே, எனக்கு இரங்கும் (சங் 56:1).  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் நாம் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.  இந்த சங்கீதத்துக்கு “மிக்தாம்” என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. “மிக்தாம்” என்பதட்க்கு தங்கம் என்று பொருள், தங்கத்தைப் போல் இந்த சங்கீதத்திலுள்ள ஒவ்வொரு வாக்கியமும் அதிக மதிப்புள்ளது. அல்லேலூயா !  பிரியமானவர்களே, தாவீது எதிரிகளினால் நெருக்கப்படும் போது “தேவனே, எனக்கு இரங்கும்” என்று தேவனை நோக்கி கதறுகிறார்.பிரியமானவர்களே, தேவனுடைய இரக்கங்களை நாம் பெற்றுக்கொள்ளுவோமென்றால் எப்படிப் பட்ட சூழ்நிலையில் நாம் இருந்தாலும் எங்களால் ஜெயத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அவருடைய கிருபை, இரக்கம், அன்பு, தயவே எங்களை இந்நாளில் வாழ வைக்கின்றது. தாவீதை போல் நமக்கு எதிரிகள் இல்லாவிடிலும், நாம் போகின்றதான நெருக்கமான சூழ்நிலையை சந்திக்க நமக்கு கர்த்தருடைய இரக்கம் அதிகமாய் தேவைப்படுகிறது, அவருடைய இரக்கம் நம் மீது இருக்குமானால் எந்த தீய

Let every person be subject to the governing authorities

Image
Let every person be subject to the governing authorities (Rom 13:1) Keep me as the apple (pupil) of your eye (Ps 17:8) 

எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்

Image
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, இந்நாட்களில் நாங்கள் எங்கு சென்றாலும் சரி , எங்கு திரும்பினாலும் சரி ஜனங்கள் “கொரோனா வைரஸைப்” பற்றி தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த வைரஸ் ஜனங்களை தாக்கி அழித்துக் கொண்டிருக்கின்றது. இன்றைய தினத்தின் புள்ளி விபரத்தின் படி இதுவரைக்கும் உலகத்தில் 252,187  பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 10,405  பேர் இந்த கொள்ளை நோயினால் மரித்தும் இருக்கிறார்கள்.  ஆகவே இது தொடர்பாக வேதம் என்ன ஆலோசனை எங்களுக்கு சொல்லுகின்றது என்று இன்றும் இரண்டு வசனங்களைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்போம்.  எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன் (ரோமர் 13:1) பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்” என்று. ஆகவே பிரியமானவர்களே, எங்களுடைய ஆபத்து நாட்களில் கர்த்தர் நம்மை பாதுகாப்பார் தானே என்று அசதியாய், ஏனோதானோவென்று இருக்காமல், வேத வசனத்துக்கு கீழ்ப்படிந்து கர்த்தர் மீது நம்முடைய விசுவாசத்

Even I will bear you, I will carry you, and will deliver you

Image
Listen to Me, O house of Jacob, And all the remnant of the house of Israel, Who have been upheld by Me from birth, Who have been carried from the womb: Even to your old age, I am He, And even to gray hairs I will carry you! I have made, and I will bear; Even I will carry, and will deliver you (Isa 46:3-4)

இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.

Image
தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன் (ஏசா 46:3-4).  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.  பிரியமானவர்களே, கர்த்தர் சொல்லுகிறார், “தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்’.  என்று, ஆம் பிரியமானவர்களே, கர்த்தர் உங்களை சிருஷ்டித்தது மாத்திரமல்ல, அவர் உங்களை  தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை அவர் ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களை அவர்  ஆபத்துக்களில் இருந்து தாங்கி வந்திருக்கிறார். அல்லேலூயா !  கர்த்தர் ‘அவர் உங்களை  தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை அவர்

Behold, God is my salvation, I will trust and not be afraid;

Image
Behold, God is my salvation, I will trust and not be afraid;’For Yah, the Lord, is my strength and song, He also has become my salvation (Isa 12:2)

தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்

Image
இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர் (ஏசா 12:2) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனம் தான் தேவன் எங்களது ஊழியத்துக்கு கொடுத்ததான “THEME“. இந்த Theme எவ்வாறு உருவானது என்பதை சுருக்கமாக தேவனுடைய நாமம் மகிமைப்படும் படியாக கூற விரும்புகின்றேன். பிரியமானவர்களே, நானும், என் மனைவியும் இலங்கை தேசத்திலே  மனிதனுடைய கைகளினால் செய்யப்பட்டதான விக்கிரகங்களையும், சொரூபங்களையும், பரிசுத்தவான்களையும் எங்களுடைய கடவுளாக  தெரிந்து கொண்டு அவர்களுக்கு எங்களுடைய துதிகளையும், மகிமைகளையும், ஆராதனைகளையும் செலுத்தி வாழ்ந்து  கொண்டிருந்தோம். நாங்கள்இலங்கை தேசத்திலிருந்து இங்கிலாந்துக்கு வரும் போது  என்னுடைய மனைவிக்கு Thiroxine இருந்தது (18 வயதிலிருந்து இருந்து, திருமணம் செய்யும் போது என் மனைவிக்கு 24 வயது). இங்கிலாந்துக்கு வந்த பிறகு GP என் மனைவிக்கு “Throxine” இருந்ததினால், என் மனைவ

Hell and Destruction are never full; So the eyes of man are never satisfied

Image
Hell and Destruction are never full, So the eyes of man are never satisfied (Pro 27:20)

பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை

Image
பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை (நீதி 27:20). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.    பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கின்றதான ஆசிர்வாதத்தில், வேலையில், பணத்தில்  திருப்தியாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். சிலர் தங்களுக்கு இருக்கின்ற பணத்தில், செல்வதில், சொத்தில் திருப்தியாக இருக்க மாட்டார்கள். வேதம் சொல்லுகிறது “ போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” என்று. தேவன் நமக்கு கொடுக்கின்றதான ஆசிர்வாதத்தில் திருப்தியாக இருக்க கற்றுக்  கொள்ள வேண்டும். அந்த திருப்தி தேவனிடத்தில் இருந்து வருகின்றது. அல்லேலூயா !  வேதம் சொல்லுகிறது, “ பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை” என்று. பாதாளம் பிசாசுக்கு சொந்தமானது, பாவம் செய்கின்றதான ஆத்துமாவே பாதாளத்துக்கு செல்லும், தன்னிடத்தில் எத்தனை பேர் வந்தாலும் பாதாளம் திருப்தியாகிறதில்ல

God who satisfies with long life

Image
With long life I will satisfy him,And show him My salvation (Ps 91:16)  For by me your days will be multiplied, and years of life will be added to you (Pro 9:11)

நீடித்த நாட்களால் திருப்திபடுத்தும் தேவன்

Image
நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி என், இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.(சங் 91 :16). என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்" (நீதி 9:11) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வசனங்களையும் இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுப்போம். பிரியமானவர்களே, தேவன் மனிதனை சிருஷ்ட்டித்து மாத்திரமல்ல, அவர் அவர்களை நீடித்த நாட்களால் திருத்திபடுத்த வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். அல்லேலூயா ! வேதத்தில் ஒரு சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது, எசேக்கியால் ராஜா மரணத்துக்கேதுவான வியாதிப்பட்டு மரணப் படுக்கையில் இருந்த போது அவர் கர்த்தரை விசுவாசித்து, அவரை  நோக்கி ஜெபித்த போது கர்த்தர் அவன் மீது மனமிரங்கி, அவனுடைய அயூசு நாட்களில் இன்னுமாக 15 வருடங்களைக் கூட்டிக் கொடுத்தார் என்று. ஆம் பிரியனானவர்களே, உங்களுடைய வாழ்க்கையிலிலும் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாக வேண்டுமென்றால் (நீதி 9:11) எசேக்கியா ராஜா போல் நீங்களும் கர்த்தரையே சார்ந்து, அவர் மீது

Job : For the thing I greatly feared has come upon me, And what I dreaded has happened to me

Image
For the thing I greatly  feared has come upon me,  And what I dreaded has happened to me (Job 3:25)

யோபு : நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது

Image
நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது (யோபு 3:25). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியாகவும், இதை வாசிக்கிற உங்களுக்கும் பக்திவிருத்தி உண்டாகும் படியாகவும் தேவன் என்னையும், என் மனைவியையும் எவ்வாறு எங்களுடைய வாழ்க்கையில் இரட்சித்தார் என்பதை சுருக்கமாக சாட்சியாக கூற விரும்புகின்றேன். அதன் பிறகு மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, நான் இலங்கை தேசத்தில் கிழக்கு மாகாணமாகிய மட்டக்களப்பில் ஒரு அர்ப்பணிப்புள்ள இந்து குடும்ப பெற்றோருக்கு மகனாக பிறந்தேன், எனக்கு ஒரு மூத்த சகோதரனும், ஒரு இளைய சகோதரனும் இருக்கிறார்கள். எனது பெற்றோர் இந்து சமயத்தில் பக்தியும், வைராக்கியமும்  நிறைந்தவர்கள், குறிப்பாக எனது தாயார் இந்து சமய கொள்கைகளை தவறாது கடைப் பிடித்து வந்தவர். நான் மட்டக்களப்பில், 1814 ம் ஆண்டு  இங்கிலாந்தை பிறப்பிடமாகக் கொண்ட வணக்கத்துக்குரிய வில்லியம் ஆல்டினால் இலங்கையில் ஸ்தாபிக்

God who has given us a spirit of power, love, and sound mind

Image
For God has not given us a spirit of fear, but of power and of love and of a sound mind (2 Timo 1: 17)

பலமும், அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை கொடுத்திருக்கும் தேவன்

Image
தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் ( 2 தீமோ 1 : 7 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.    பிரியமானவர்களே, தேவன் அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு “பயமுள்ள ஆவியைக்” கொடுக்கவில்லை மாறாக (1 ) பலமுள்ள ஆவியையும் (2 ) அன்பு கூறுகிற ஆவியையும் (3 ) தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையும் கொடுத்திருக்கிறார்.  “பயமுள்ள ஆவி” -  பயம் தேவனிடம் இருந்து வருவதில்லை, அது பிசாசிடம் இருந்து வருகின்றது. “வருஷத்தில் 365  நாட்கள் உள்ளன. “Fear not “ என்ற வார்த்தையும் வேத புஸ்தகத்தில் 365 தடவைகள் இருக்கின்றது. தேவன் ஒவ்வொருநாளும் எங்களை பார்த்து சொல்லுகிறார் “பயப்படாதே” என்று.  நாங்கள் இந்த பூலோகத்தில் நம்மை சுற்றி  நடக்கின்ற கொடூரமான, பயங்கரமான  காரியங்களைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. வேதத்தில் ஒரு சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது, தீக்கதரிசி எலிசாவின் ( Prophet  Elisha ) வே

God does everything beautiful in its time

Image
He has made everything beautiful in its time (Ecc 3:11)

தேவன் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்கிறார்

Image
அவர் (தேவன்)சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார் (பிரச 3:11 ).  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.    பிரியமானவர்களே, காலம்  நிறைவேறினபோது சரியான காலத்திலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சாதாரண மானிடனாக  (கலா 4:5) மனுஷனை அவனுடைய பாவத்திலிருந்து மீட்டெடுக்கும் பொருட்டு இந்த பூலோகத்துக்கு  (சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) வந்தது எதோ தற்செயலாக நடை பெற்ற நிகழ்ச்சியல்ல, அது ஏற்கனவே பிதாவினால் முன்குறிக்கப்பட்டது, திட்டமிடப்பட்டது. அவர் பிறந்த காலம் அரசியல் ரீதியாக சரியான காலம், கலாச்சார ரீதியாகவும் சரியான காலம்,  அல்லேலூயா ! அதே போல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும்  சரியான காலத்தில் நடை பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை, ஏனெனில் அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்து முடிகிறவர். அல்லேலூயா ! பிரியமானவர்களே, தேவனுக்கு நம்முடைய வாழ்க்கையில் எதை, எப்போது, எங்கே,

If you falter (grow weary) in a day of trouble (adversity), your strength is small

Image
If you falter (grow weary) in a day of trouble (adversity), your strength is small (Pro 24:10)

ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது

Image
ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது (நீதி 24:10) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.    பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள Deadly Coronavirus  புள்ளி விபரங்களைப் பார்த்து பயந்து, சோர்ந்து போகாதீர்கள். வேதம் சொல்லுகிறது, “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோவாயானால், உன் பெலன் குறுகினது” என்று. இந்த பூலோகத்தில் நாம் வாழும் நாளெல்லாம் நமக்கு போராட்டங்களும், உபத்திரவங்களும், சோதனைகளும் உண்டு. இயேசுவே சொல்லியிருக்கிறார், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (யோவா 16:33) என்று.   ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் உங்களை சுற்றி இந்த பூலோகத்தில் நடக்கும் பயங்கரமான காரியங்களில் உங்களுடைய கவனத்தை  செலுத்தாமல், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மீது உங்களுடைய கவனத்தையும், நம்பிக்கையையும் வையுங்கள், அதட்க்காக இந்த பூலோகத்தில் நடக்கும் செய்திகளை கேட்கவும், பார்

You are the God who works wonders

Image
Who is so great a God as our God? You are the God who does wonders; You have declared Your strength among the peoples (Ps 77: 13 b & 14)

அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே

Image
நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?  அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர்   (சங் 77:13&14).  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, வாழ்க்கையில் நமக்கு பாடுகள், உபத்திரவங்கள், நிந்தைகள், வருகின்ற போது நாம் தேவனுடைய மகத்துவங்களையும், அவருடைய வல்லமையையும், மற்றும் அவர் நமக்கு கடந்த நாட்களில் செய்த நன்மைகளையும், அதிசயங்களையும் சிந்தித்துப் பார்த்து, அவருடைய நாமத்தை துதித்து, ஆராதித்து  அவருக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். அல்லேலூயா !  நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்? வேதம் சொல்லுகிறது “அவர் பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்” (எரேமி 10 : 12 ) என்று. தேவன் அவ்வளவு பெரியவர். அவருடைய செயல்களை நாம் மட்டுப்படுத்தி விட முடியாது, அவர் மனிதனுடைய சிந்தைக்கும், ஞானத

God who makes favour in the eyes of men and the authorities

Image
So it was, when the king saw Queen Esther standing in the court,  that   she found favor in his sight, and  the king held out to Esther the golden scepter that  was  in his hand. Then Esther went near and touched the top of the scepter (Esth 5:2)