Posts

Showing posts from November, 2019

The Lord knows those who trust in Him

The Lord is good, a stronghold in the day of trouble; and He knows those who trust in Him (Nah 1:7). I greet you in the name of the Lord and savior Jesus Christ. Beloved ! Let us take the above scripture for meditation today. Remember the good things the Lord has done for you from the day you appeared in your mother's womb to this day, He has protected you in the womb of your mother, and helped you to be born in this world, and nourished you, clothed you, and kept you safe in the day of your trouble. He has done innumerable good things and wonders in your life, And the Lord knows those who trust in Him and He bestows them with His grace and mercy.Hallelujah! May the Lord Jesus Christ bless you and your family.

கர்த்தர் தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்

கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார் (நாகூ 1 :7). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். நீங்கள் தாயின் கர்ப்பத்தில் தோன்றின நாள் முதல் இந்நாள் வரை கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளை நினைத்துப்பாருங்கள், அவர் உங்களை தாயின் கர்ப்பத்தில் நீங்கள் அழிந்து போகாத வண்ணம் பாதுகாத்து, இந்த பூலோகத்தில் நீங்கள் மானிடனாக பிறக்க உதவி செய்ததோடு , உங்களை போஷித்து , உங்களை உடுத்துவித்து, தீங்கு நாளில் உங்களூக்கு அரணான கோடடையாக இருந்து அவர் உங்களை பாதுகாத்து பராமரித்து வந்திருக்கிறார், அவர் உங்கள் வாழ்க்கையில் எண்ணி முடியாத நன்மைகளையும், அதிசங்களையும் செய்திருக்கிறார், மற்றும் கர்த்தர் தம்மை நம்புகிறவர்களை அறிந்திருப்பதோடு அவர்களுக்கு தம்முடைய கிருபையையும், இரக்கத்தையும் அளவுக்கதிகமாக கொடுத்து அவர் அவர்களை ஆசீர்வதிக்கிறார். அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதி

Repent, people, and return to the living God

Men, why are you doing these things? We also are men with the same nature as you, and preach to you that you should turn from these useless things to the living God, who made the heaven, the earth, the sea, and all things that are in them (Acts 15:15). I greet in the name of the Lord and Savior Jesus Christ. Let us take the above scripture for meditation today. The apostles refused  when people are willing to give them glory and said Men, why are you doing these things? We also are men with the same nature as you. If people give the glory to men, which belongs God, they sin against God. Like, if men accepts the glory that is to be given to God, they also sin against God. That's why the apostles refused the glory which people are willing to give them and preached the truth. Yes beloved , God alone is worthy of praise, glory, and glory. Men are not worthy of praise, worship and glory. God alone is worthy of worship. Today people forget the God who created them and worship men and i

ஜனங்களே மனந்திரும்பி ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்புங்கள்

மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம் (அப்போ14:15). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். மனுஷர்கள் தங்களுக்கு பலியிட மனதாயிருக்கும் போது அப்போஸ்தலர்கள் அதை மறுத்துவிட்டு ‘மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே’ என்று அவர்களுக்கு கூறுகிறார்கள். ஜனங்கள் தேவனுக்குச் செலுத்த வேண்டிய மகிமையை மனுஷனுக்குச் செலுத்தினால் அவர்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்கிறார்கள், அதே வேளை தேவனுக்கு கிடைக்க வேண்டிய மகிமையை மனுஷர் அங்கீகரித்தால் அவர்களும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்கிறார்கள். ஆதலால் அப்போஸ்தலர்கள் மனுஷர்கள் தங்களுக்கு பலியிட மனதாயிருந்த போது அதை மறுத்துவிட்டு ‘ நாங்களும் உங்கள

Behold , I am alive forevermore

And when I saw Him, I fell at His feet as dead. But He laid His right hand on me, saying to me, “Do not be afraid; I am the First and the Last.I am He who lives, and was dead, and behold, I am alive forevermore. Amen. And I have the keys of Hades and of Death (Rev 1: 17 & 18). I greet you In the name of the Lord and Savior Jesus Christ. Beloved ! Let us take the above two scriptures for meditation today. When Jesus Christ appeared to John in his glory , he fell at His feet as dead. He laid his right hand on John, revealing himself to him , saying with love Do not fear. (1)   I am the First and the Last, I am He who lives - Jesus revealed his divine revelation in this sentence. (2) Was dead  - through this Jesus says that, He died on the Calvary by shedding His holy blood for the sins, iniquities and transgressions of all mankind in the world. (3) behold, I am alive forevermore. Amen - through this Jesus says that, He rose to life on the third day and overcame death, and lives for

மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்

அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும், பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன், மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் ஆமென்; நான் மரணத்திற்கும்  பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளி 1:17 & 18). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்கள தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். இயேசு கிறிஸ்து தன்னுடைய மகிமையிலே யோவானுக்கு தரிசனம் கொடுத்த போது, செத்தவனைப்போல அவரது பாதத்தில் விழுந்து கிடந்த யோவான் மேல் தம்முடைய வலது கரத்தை வைத்து, அவரை நோக்கி அன்போடு பயப்படாதே என்று சொல்லி தம்மை பற்றிய வெளிப்பாடடை யோவானுக்கு வெளிப்படுத்தினார். (1) நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன் - இந்த வாக்கியத்தை இயேசு கூறுவதன் மூலமாய் தன்னுடைய தெய்வீக வெளிப்பாடடை வெளிப்படுத்துகிறார். (2) மரித்தேன் - இந்த வார்தையைக் கூறுவதன் மூலமாய் மனித குலத்தின் பாவங்களுக்காய், அக்கிரமங்

The way of the Lord and the way of man

There is a way that seems right to a man, but its end is the way of death (Pro 14:12 & 16:25). I greet you in the name of the Lord and Savior Jesus Christ,Beloved ! Let us take the above scripture for meditation today. There are two ways, the way of the Lord and the way of man. The righteous walk in the way of the Lord, and those who walk in the way of the Lord have life. The wicked walk in wicked ways to fulfill his fleshly desire, he does not consider whether the path he is going is  right path or not, he is aiming to fulfill his fleshly desire and he does not know that, he is on the way to death. The scripture says that, ' There is a way that seems right to a man, but its end is the way of death '  Therefore, beloved, you need to examine your words, thoughts, and deeds whether they are pleasing to the Lord. If the path you had chose is not pleasing to the Lord, you need to correct your ways. The way of the Lord which leads you to heaven. Hallelujah ! May the Lord Jesus

கர்த்தருடைய வழியும், மனுஷனுடைய வழியும்

மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள் (நீதி 14 :12 ) & ( நீதி 16 :25 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தருடைய வழி, மனுஷனுடைய வழி என்று இரண்டு விதமான வழிகள் உண்டு, நீதிமான் கர்த்தருடைய வழியில் நடக்கிறான், கர்த்தருடைய வழியில் நடப்பவர்களுக்கு ஜீவன் உண்டு. துன்மார்க்கனோ தன்னுடைய மாமிச இச்சையை நிறைவேற்றுவதட்க்காக துன்மார்க்கமான பாதைகளில் நடக்கிறான், அவன் தான் போகின்றதான பாதை சரியான  பாதையா என்பதைக் குறித்து சிந்தித்து பார்ப்பதில்லை , அவன் தன்னுடைய சுய இட்சையை நிறைவேற்றுவதிலே நோக்கமாக இருக்கிறான், அவனுக்கு தான் செல்லும் பாதை செம்மையாய் தோன்றுகின்றது, தான் மரணத்தின் பாதையில் நடக்கிறான் என்று  அவனுக்கு தெரியவில்லை.வேதம் சொல்லுகிறது ‘ மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு, அதின் முடிவோ மரண வழிகள்’ என்று. ஆதலால் பிரியமானவர்களே, நீங்கள் உங்களுடைய வார்த்தைகளையும், சிந்தைகளையும

It will surely come, and it will not delay

For the vision is yet for an appointed time, but at the end it will speak, and it will not lie.Even though it delays wait [patiently] for it, because it will surely come; it will not delay (Hab 2:3). I greet you in the name of the Lord and Savior Jesus Christ.Beloved, Let us take the above scripture for meditation today. The Lord in his time fulfills everything he has decided. Surely the time will come when the Lord will have it in his due time. Therefore, let us put emphasis on the vision of the Lord and wait patiently and faithfully for his time and for the fulfillment of his promise. In these waiting days your faith and patience will be tested and your true character will be revealed. The Lord is telling you today that, ' It will not lie, wait for it though it is late, It will surely come, and it will not delay' Hallelujah ! May the Lord Jesus bless you and your family.

அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை

குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை (ஆப 2:3). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தர் தாம்  தீர்மானித்த  ஒவ்வொரு காரியத்தையும் தம்முடைய   காலத்தில் நிறைவேற்றுகிறார். நிச்சயமாய் காரியம் கர்த்தர் குறிப்பிடட காலத்தில் , அவர் தீர்மானித்த காலத்தில் நிறைவேறும். ஆகவே நாம் கர்த்தருடைய தரிசனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவருடைய வாக்குத்தத்தம் நிறைவேறும் படி பொறுமையோடும், விசுவாசத்தோடும் அவருடைய காலத்துக்காக, வேளைக்காக காத்திருக்க வேண்டும். இத்தகைய காத்திருக்கிற  நாட்களில் உங்களுடைய விசுவாசமும், பொறுமையும் சோதிக்கப்படுவதோடு, உங்களுடைய உண்மையான சுபாவமும் வெளிப்படுகின்றது. கர்த்தர் இன்றைக்கு உங்களுக்குச் சொல்லுகிறார் ‘ அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது ந

Repent the Kingdom of Heaven is very near.

Truly, these times of ignorance God overlooked, but now commands all men everywhere to repent (Acts 17:30)

மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் மிகவும் சமீபமாயிருக்கிறது.

அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்,இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்(அப்போ 17:30). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். அத்தேனே படடனத்தில் உள்ள ஜனங்கள் மெய்யான தேவனை அறியாது, அறியப்படாத தேவனை அறியாமையினால் விக்கிர ஆராதனை செய்து கொண்டு பாவத்தில் மூழ்கியிருந்த நாட்களில் அவர்கள் தங்களுடைய விக்கிர ஆராதனையிலிருந்து, தங்களுடைய பாவ வாழ்க்கையில் இருந்து மனந்திரும்பி மெய்யான தேவனாகிய அவர்களை சிருஷ்டித்த, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த தேவனிடம் அவர்கள் வர வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு அப்போஸ்தலனாகிய பவுல் மாஸ் மேடையில்  ‘அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்’ என்று சத்தியத்தை பிரசங்கித்தார். புற ஜாதியாருக்கு, விக்கிர ஆராதனைக்காரருக்கு  இந்த சத்தியத்தை அறிவிக்கப்படுவதட்க

இயேசு தன் நாமத்தை அறிந்திருப்பவர்களை விடுவிப்பதோடு அவர்களை உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறார்

அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன் ( சங் 91 :14 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம்.இங்கே இரண்டு காரியங்களை தேவன் இந்த வசனத்தினூடாக எங்களோடு பேசுகிறார்.முதலாவது அவர் மீது வாஞ்சையாய் இருக்கிறவர்களை அவர் விடுவிக்கிறார், இரண்டாவது அவர் நாமத்தை அறிந்திருக்கிறவர்களை அவர் உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறார்.அல்லேலூயா! எவ்வளவு ஆறுதலான வார்த்தை.வாக்குக் கொடுத்த தேவன் தன்னுடைய வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவராக இருக்கிறார்.நீங்கள் இயேசு மீது வாஞ்சையாக இருப்பீர்களானால் அவர் உங்களை உங்கள் பிரச்சனையில் இருந்து, தீமையில் இருந்து விடுவிக்க உண்மையுள்ளவராக இருக்கிறார்.மற்றும் நீங்கள் இயேசு என்ற நாமத்தைஅறிந்திருப்பீர்களானால்அதாவது இயேசு என்கின்ற நாமத்தின் மீது உங்களுடைய விசுவாசத்தை வைப்பீர்களானால் அவர் உங்களை வாதைகளுக்கும், பொல்லாப்புக்க

Jesus delivers those who know his name and puts them in a high place

Because he has set his love upon me, therefore I will deliver him, I will set him on high, because he has known my name (Ps 91:14)

Do you know God who created you and died for your sins?

To which I was appointed a preacher, an apostle, and a teacher of the Gentiles (2 Timo 2:11).For this reason I also suffer these things; nevertheless I am not ashamed, for I know whom I have believed and am persuaded that He is able to keep what I have committed to Him until that Day (2 Timo 1:12).

உங்களை சிருஷ்டித்த, உங்களுடைய பாவங்களுக்காக மரித்த தேவனை அறிந்திருக்கிறீர்களா?

அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன் (2தீமோ1:11). அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று  நிச்சயித்துமிருக்கிறேன் (2தீமோ1:12 ). கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு  வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும்  இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். இந்த பிரபஞ்சத்தில் அநேக நல்லவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் உலகப்பிரகாரமான காரியங்களுக்காக பாடுகளை அனுபவிக்கிறார்கள், அவர்கள் பாடுகள் அனுபவிப்பதட்காக வெட்கப்படுவதில்லை.ஆனால் கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டிருந்த அப்போஸ்தலனாகிய பவுல் தான் கிறிஸ்துவின் நிமித்தமாய் பாடுகளை அனுபவிப்பதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுகிறார்,

Your needs will be seen and provided in the mount of the Lord

Abraham called the name of that place Jehovahjireh, as it is said to this day, In the mount of the Lord it shall be seen (Gen 22:14)

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது (ஆதி 22:14). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம்.ஒரு நாள் தேவன் ஆபிரகாமிடம் உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு’ (ஆதி 22:2) என்று சொன்னபோது ஆபிரகாம் உடனடியாக தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான் (ஆதி 22 :3) தேவன் அவனுக்கு கூறின இடத்துக்குச் சென்றடைய மூன்று நாட்களாயின, அந்த மூன்று நாட்களில் ஆபிரகாம் தன

Hills where my helps come from

I will lift up my eyes to the hills, from whence comes my help? ( Ps 121:1) My help comes from the Lord, who made heaven and earth ( Ps 121:2)

உதவி வரும் பர்வதங்கள்

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன் (சங் 121:1) வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும் (சங் 121 :2).ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள இரண்டு வேத வசனங்களையும் இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம்.இந்த வேத வசனங்கள் தேவ ஆவியின் உந்துதலினால் தாவீது இராஜாவினால் எழுதப்பட்டிருக்கின்றது (2தீமோ 3:16). தாவீது இராஜாவின் கண்கள் எந்த ஒரு மனிதனையும் உதவிக்காக நோக்கிப் பார்க்கவில்லை, மாறாக அவருடைய கண்கள் தனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களை நோக்கிப்பார்த்தது. பர்வதங்கள் என்ற பதத்துக்கு ஆங்கிலத்தில் hills/ mountains (மலை) என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, அப்படியென்றால் தாவீது மலைகளை ஒத்தாசைக்காக, உதவிக்காக நோக்கி பார்த்தார் என்று அர்த்தம் அல்ல, அவருடைய கண்கள் ஒத்தாசைக்காக வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரை நோக்கி பார்த்தன. ஆம் பிரியமானவர்களே, வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரே அந்த ஒத்தாசை வரும் ப

It’s good to bear the yoke at young

It is good for a man to bear the yoke while he is young (Lam 3:27)

இளவயதில் நுகத்தை சுமப்பது நல்லது

தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது (புல 3:27). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.யூதா ஜனங்கள் பாபிலோனிய மன்னனினால் பாபிலோனுக்கு சிறை பிடித்து கொண்டு சென்ற போது பெரியோர்களுடன் வாலிபர்களும், சிறுவர்களும் கொண்டு செல்லப்படடார்கள்.இளம்பிராயத்தில் இருந்தவர்களுக்கு தங்களுடைய இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் கர்த்தர் அவர்களுடைய நுகத்தை இறக்கி வைக்கும் போது கர்த்தருடைய பராமரிப்பையும், இரக்கத்தையும், கிருபையையும், அன்பயையும், இரட்சிப்பையும் புரிந்து கொண்டு கர்த்தர் விண்ணப்பத்துக்கு பதில் கொடுத்தார், கர்த்தர் தங்களை மறக்கவில்லை, கைவிடவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறார்கள், இதனால் இவர்கள் விசுவாசத்தில் இன்னுமாய் பலப்படுகிறார்கள்.  ஆம் பிரியமானவர்களே, இளம்பிராயத்தில் எத்தனை பாடுகள்? கர்த்தர் ஏன் இந்த பாடுகளை என் இளவயதில் அனுமதித்தார் என்று கவலையோடு சோர்ந்து போய்

Offer your praise and thanks to God who does wonders

Blessed be the Lord God, the God of Israel , who only does wondrous things (Ps 72:18).

அதிசயங்களை செய்யும் தேவனுக்கு உங்களுடைய துதிகளையும், ஸ்தோத்திரங்களையும் செலுத்துங்கள்

இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர் (சங் 72: 18) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைக்காகவும் , அவருடைய வாக்குத்தங்களுக்காகவும் நாம் அவரைத் துதிக்க வேண்டும், ஒருவேளை வாக்குத்தத்தம் இன்னும் நிறைவேறாமல் இருக்கலாம் ஆனாலும் அது நிறைவேறும் என்று கர்த்தரை விசுவாசித்து அவரை துதித்து ஸ்தோத்திரம் பண்ண வேண்டும், அவர் அதிசயங்கள் செய்கின்ற தேவனாய் இருக்கிறார்.தாவீது எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரை விசுவாசித்து அவரை துதித்து அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார். தாவீதின் தேவன் இன்றும் ஜீவிக்கிறார்.தாவீதுக்கு நன்மைகளையும் , அதிசயங்களையும் செய்த தேவன், என்னுடைய வாழ்க்கையிலும் அநேக நன்மைகளையும், அதிசயங்களையும், மகத்துவமான காரியங்களையும் செய்திருக்கிறார், செய்து கொண்டிருக்கிறார், நீங்களும் கர்த்தரை விசுவாசித்து அவரை துதித்து அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்து

Let's praise the Lord for his lovingkindness and for his faithfulness

I will worship toward Your holy temple, and praise your name, for your lovingkindness and Your truth, for you have magnified Your word above all Your name ( Ps 138:2 )

கர்த்தருடைய கிருபையின் நிமித்தமும், அவருடைய உண்மையின் நிமித்தமும் நாம் அவருடைய நாமத்தை துதிக்க வேண்டும்

உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர் (சங் 138:2). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தருடைய கிருபையின் நிமித்தமும், அவருடைய உண்மையின்  நிமித்தமும் நாம் அவருடைய நாமத்தை துதிக்க வேண்டும். வாக்கு கொடுத்த தேவன் உண்மை யுள்ளவராக இருக்கிறார். கர்த்தர் தமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அவர் தமது வார்த்தையை மகிமைப்படுத்தியிருக்கிறார். தாவீதுக்கு துன்பங்களும், வேதனைகளும், உபத்திரவங்களும் வந்து நெருக்கப்படட போது அவருடைய ஆத்துமா பெலனிழந்து போய் தன்னுடைய சரீரத்திலும், ஆவியிலும் சோர்ந்து போனார், அவரால் வேதனைகளையும், துன்பங்களையும் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் தேவனை நோக்கி கூப்பிடட போது கர்த்தர் அவர் ஆத்துமாவில் பெலன் தந்து அவரை தைரியப்படுத்தினார். கர்த்தர் நம

The Lord will give what is good, and the land will yield its fruits

The Lord will give what is good, and our land will yield its increase (Ps 85:12).

கர்த்தர் நன்மையானதைத் தருவார், தேசமும் தன் பலனைக் கொடுக்கும்

கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும் ( சங் 85 : 12 ).ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். நீங்கள் வெகு நாட்களாய் நன்மையை எதிர் பார்த்து கிடைக்காத பட்ச்சத்தில் சோர்ந்து போய் இருக்கலாம். ஆனால் நான் நன்மையானதை உனக்குத் தருவேன்,நீ வாழுகின்ற இந்த தேசமும் தன் பலனைக் கொடுக்கும் என்று உனக்கு வாக்குக் கொடுத்த தேவன் தனது வாக்கு தத்ததில் உண்மை உள்ளவராக இருக்கிறார், நன்மை செய்வது தேவனின் குணாதிசயங்களில் ஒன்று, அவருக்கு தெரியும் எப்போது எந்த நன்மையை உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று, அவருடைய வேளை வரும் போது தேவனிடம் இருந்து அந்த நன்மையை நீங்கள் பெற்றுக் கொள்ளுவீர்கள்.தேசம் ஆசிர்வதிக்க படுவதட்கும், தேசம் தன் பலனைக் கொடுப்பதட்கு கர்த்தருடைய கிருபையும், இரக்கமும் தேவை.ஆகவே தேசத்தை ஆட்சி செய்யும் தேசத் தலைவர்களை தேவன் வழிநடத்தும் படியாகவும், தேவனுடைய ஆளுகை தேசத்தில் இருக்கும் படியாகவும், தேசத்தில் தேவனுடை

The God who crowns the year with his goodness

You crown the year with Your goodness (Ps 65:11).

வருஷத்தை தம்முடைய நன்மையினால் முடி சூட்டும் தேவன்

வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர் ( சங் 65 :11 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.தேவன் தாம் சிருஷ்டித்த ஒவ்வொரு மனுஷனுக்கும் ஆயுசு நாட்களை கூட்டிக் கொடுப்பதோடு ஒவ்வொருவருடைய  வருஷத்தையும் அவருடைய நன்மையினாலும் , கிருபையினாலும் முடி சூட்டுகிறார்.நன்மை என்பதற்கு, "நல்ல பங்கு" அல்லது "உயர்ந்த ஈவுகள்" என்பது அர்த்தமாகும்.உங்களுக்குத் தம்முடைய நல்ல ஈவுகளாகிய நன்மைகளைச் சம்பூரணமாக் கொடுக்க தேவன் விரும்புகின்றார். உங்களுடைய இருதயம் எந்த அளவுக்கு சுத்தமாயிருக்கிறதோ, அந்த அளவுக்கு, நீங்கள் தேவனுடைய நன்மையையும், கிருபையையும் உங்களுடைய வாழ்க்கையில் பெற்றுக் கொள்ளுவீர்கள். தாவீது ராஜாவின் இருதயம் சுத்தமாக இருந்ததினாலும், அவர் தேவனை நேசித்ததாலும் அவருடைய  ஜீவனுள்ள நாளெல்லாம் தேவனுடைய நன்மையும் கிருபையும் அவரைத் தொடர்ந்தது (சங். 23:6). நீங்களும் தாவீதை போல சுத்த இருதயத்தோடு தேவனை நேசிப்பீர்களானால் த

Give thanks to God in all circumstances

In everything give thanks; for this is the will of God in Christ Jesus for you ( 1 Theso 5:18)

எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள்

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது (1தெச 5:18).ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் எங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனைத் துதிக்க,அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகின்றார்.உங்களுடைய இருதயமானது கர்த்தரை துதிக்கும் துதிகளாலும், ஸ்தோத்திரத்தாலும் நிரம்பியிருக்கும் போது தேவனைப் பற்றி குறை சொல்ல உங்கள் இருதயத்தில் ஒன்றும் இருக்காது.ஆகவே இன்றையில் இருந்து உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லா காரியத்துக்கும் அது ஒரு வேளை சந்தோஷமான காரியமாக இருக்கலாம் அல்லது துக்கமான காரியமாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலு

The Lord is good, for his mercy endures forever

Give thanks to the Lord, for he is good, For his mercy endures forever (Ps 107:1)

கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது

கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (சங் 107 :1 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தரே சர்வ சிருஷ்டிக்கும் தேவனாகவும், சர்வலோகத்திட்கும் அதிபதியாகவும் இருக்கிறார்,அவரே எல்லா மனுஷருக்கும் பரலோக பிதாவாகஇருக்கிறார். அவர் மனுபுத்திரர் எல்லாரையும் பராமரித்து வருகிறார்,ஆபத்து வேளைகளில் மனுஷருக்கு அனுகூலமான துணையாய் இருக்கிறார், அவர் மனுஷர்களுடைய தேவைகளை சந்தித்து வருகிறார், வியாதிகளை நீக்கி அவர்களுக்கு சுகத்தைக் கொடுக்கிறார், ஆற்றி தேற்றி அரவணைக்கிறார் மற்றும் ஒவ்வொருவருடைய   ஜெபத்துக்க்கும் பதில் கொடுத்து வருகிறார்.அவர் நம்முடைய வாழ்க்கையில் நல்லவராகவே இருக்கிறார், அவருடைய இரக்கம், கிருபை, அன்பே நம்மை இன்று வாழ வைக்கின்றது.அவரே மனுபுத்திரர்களின் பாவங்களுக்காக, அக்கிரமங்களுக்காக, மீறுதலுக்காக அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து மனுஷ குலத்தை மீட்டு எடுத்

The battle belongs to the Lord

Thus says the Lord to you: ‘Do not be afraid nor dismayed because of this great multitude, for the battle is not yours, but God’s (2 Chro 2:15).

யுத்தம் கர்த்தருடையது

நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது (2 நாளா 20 :15 ).ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.’ நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்’ என்று வேதம் சொல்லுகிறது.ஆம் பிரியமானவர்களே, உங்களுடைய பிரச்சனையைப் பார்த்து பயந்து, எப்படி அந்த நிறுவனத்தில் இருந்து, அந்த அதிகாரிகளிடம் இருந்து நான் அந்த ஆவணத்தை பெற்றுக்கொள்ள போகிறேன், எப்படி இந்த பிரச்சனையில் இருந்து நான் வெளியே  வரப்போகிறேன் என்று பயந்து நடுங்கி கலங்கி போய் இருக்கிறீங்களா? கவலை படாதிருங்கள். உங்களுடைய பிரச்சனையைப் பார்க்கிலும் உங்களை சிருஷ்டித்த தேவன் பெரியவர், உங்களுடய பிரச்சனையில் இருந்து உங்களை விடுதலை செய்ய அவரால் முடியும், ஆகவே பிரச்சனையில் இருந்து உங்களை விடுதலை செய்யும் உங்களை மானிடனாக சிருஷ்டித்த தேவனை நோக்கி பாருங்கள

Success shall come from the Lord

The lot is cast into the lap,but its every decision is from the Lord (Pro 16:33).

காரியசித்தியோ கர்த்தரால் வரும்

சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும் (நீதி 16:33).ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.நீங்கள் ஒரு காரியத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் உங்களுடைய வாழ்க்கையில் நடை பெரும் எந்த காரியங்களும் ராசிகளின் அடிப்படையிலோ, விதியின் அடிப்படையிலோ நடை பெறுவதில்லை மாறாக உங்களுடைய வாழ்க்கையில் நடைபெறும் சகல காரியங்களும் தேவனுடைய சித்தத்தின் பிரகாரமாகவே  நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தேவனுடைய சீட்டு உங்களுடைய மடியிலே போடப்படும் ஆகவே தேவனுடைய சித்தம் உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேறும் படியாக நீங்கள் ஜெபிக்க வேண்டும், உங்களுடைய சித்தத்துக்கு ஏற்ற பிரகாரம் தேவன் தம்முடைய சித்தத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கக் கூடாது.சிலர் நினைப்பது தங்களுடைய சுய பலத்தினால், தங்களுடைய சுய முயற்சியினால் , தங்களுடைய சுய ஞானத்தினால் காரியத்தை சித்திக்க முடியும் என்று, ஆனால் வேதம் சொல்லுகிறது ‘காரியசித்தியோ கர்த்த

உத்தமனனும், மாறுபாடுள்ள இருதயமுள்ள மனிதனும்

உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான் (நீதி 28 : 18). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.உத்தமனனாய் நடக்கிறவன், மாறுபாடான மனமுள்ளவன் என்று இரண்டு விதமான நபர்களைக் குறித்து வாசிக்கின்றோம்.முதலில் மாறுபாடான இருதயமுள்ள மனிதனைக் குறித்து தியானிப்போம், மாறுபாடான மனமுள்ளவன் இரு வழிகளில் நடக்கிறவனாய் இருக்கிறான், இவனிடத்தில் உண்மையும், நேர்மையும் இருக்காது,இவன் மாய்மாலமுள்ளவனாய் இருப்பான், அதாவது வெளிவேஷம் போட்டு மற்றவர்களை ஏமாற்றுகிறவன், அவனுக்குள் தெளிந்த சிந்தனை இருக்காது, எப்போதும் குழப்பமடைந்த நிலையில் காணப்படுவான், அவனால் எந்த வழி நல்ல வழி என்பதை இனம் கண்டு கொள்ள முடியாதவனாய் இருப்பதினால் எல்லா வழிகளிலும் செல்வான்,இவனோடு கர்த்தர் இல்லாததினால் அவருடைய பாதுகாப்பும் இவனுக்கு இருக்காது, முடிவில் எங்கோ ஒரு படு குழியில் விழுந்து தன்னுடைய வாழ்க்கையை தானே அழித்துக் கொ

A man of upright and a man of unrighteousness

Whoever walks blamelessly will be saved, but he who is perverse in his ways will suddenly fall (Pro 28:18)

The God who keeps you in perfect peace

You will keep him in perfect peace, whose  mind is stayed on You, because he trusts in You (Isa 26:3).

பூரண சமாதானத்தினால் காத்துக் கொள்ளும் தேவன்

உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்(ஏசா26:3 ) ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே!  நீங்கள் இருக்கின்ற  சூழ்நிலைகளில் கர்த்தரை நம்புவதட்கு உங்களுக்கு ஒன்றும் இல்லாவிடடாலும், அவருடைய  கிருபை, இரக்கம், பாதுகாப்பு, பராமரிப்பை குறித்த நிச்சயம் உங்களிடம் இருந்து எல்லா சூநிலைகளிலும் அவரையே சார்ந்து அவரை உறுதியாய் பற்றிக் கொண்டு வாழ்வீர்களானால் கர்த்தர் உங்களை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்ள உண்மையுள்ளவராக இருக்கிறார்.அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

The world through earthly wisdom don’t know God

The world through earthly wisdom don’t know God ( 1 Corin 1:21 ).

உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கிறது ”

“உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கிறது”(Iகொரிந்தியர் 1:21). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே ! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். இன்று உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கிறது, மறுதலிக்கின்றது, இவர்கள்  தங்களுடைய ஞானத்தைக் குறித்து பெருமை படுகிறார்கள், விஞான வளர்ச்சியை குறித்து மேன்மை பாராட்டுகிறார்கள்.ஆனால் இவர்களுடைய உலக ஜானத்தினால் தேவனை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். இவர்களுடைய ஞானம் மாயையானது.தங்களை சிருஷ்டித்த தேவனை தங்களுடைய  ஞானத்தினால் அறிய முடியாமல் இருக்கிறார்கள்.சிலுவையைப்பற்றிய உபதேசம் இவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது, தேவன் தாமே இவர்களுடைய மனக்கண்ணை திறப்பாராக.அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

தேவனுடைய அறிவு அளவில்லாதது

நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது (சங் 147:5). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.பிரியமானவர்களே! மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். கர்த்தருடைய மகத்துவத்தைக் குறித்து இங்கே நாம் வாசிக்கின்றோம். நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவராய் இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது என்று வேதம் சொல்லுகின்றது. ஆம் பிரியமானவர்களே , தேவன் சர்வஞானமுள்ளவர், அவருடைய அறிவின் ஆழத்தை மனுஷனால் காணவும் முடியாது ,அறிந்து கொள்ளவும் முடியாது, அவர் அவ்வளவு பெரியவராய் இருக்கிறார்.எரேமியா10 ம் அதிகாரம் 12 ம் வசனத்தில் நாம் வாசிக்கின்றோம் ‘ தேவன் பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார் ‘ என்று. வானத்தை தம்முடைய அறிவினால் விரித்தவருடைய ஞானத்தின் ஆழத்தை , அறிவின் ஆழத்தை எந்த மனுஷனாலும் காண  முடியாது, அவருடைய அறிவோ அளவில்லாதது. தேவன் அவ்வளளவு பெரியவராகவும்,

God's understanding is infinite

Great is our Lord, and mighty in power, his understanding is infinite  (Ps 147:5).

உங்களை ஆசிர்வதிக்கும் தேவன்

சகல ஜனங்களைப்பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் (உபா7:14).ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே! நீங்கள் ஆசிர்வாதமாய் வாழ வேண்டும் என்று உங்களை சிருஷ்டித்த தேவன் விரும்புகின்றார்,  அதனால் அவர் உங்களை சிருஷ்டிக்கும் போது, அவர் உங்கள் வாழ்க்கையில் அவர் உங்களுக்கென்று ஆயத்தப்படுத்திய ஆசீர்வாத விதைகளை உங்கள் வாழ்க்கையில் ஏற்கனவே விதைத்து விட்டார்.ஆகவே அவற்றை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தேவனுக்கு பிரியமில்லாத அழுக்கான, அருவருப்பான காரியங்களை நீங்கள் அகற்றி அவருக்கு முன்பாக பரிசுத்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து அவரை நீங்கள் பிரியப்படுத்தும் போது நிச்சயமாய் தேவன் உங்களுக்காக விதைத்த ஆசிர்வாதத்தை அவருடைய வேளையில் பெற்றுக்கொள்ளுவீர்கள். ஆமென் ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

God who blesses you

You shall be blessed more than any other people ( Deu 7:14 ).

Jesus is faithful to his words

I am with you always, even to the end of the age.” Amen ( Matt 28:20)

தேவன் இயேசு கொடுத்த வாக்குதத்ததில் உண்மை உள்ளவராக இருக்கிறார்

இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் ஆமென் ( மத் 28 : 20 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே! நீங்கள் உங்கள் எதிர் காலத்தைக் குறித்து பயப்படத்தேவையில்லை, இயேசு உங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறார் ‘ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் ஆமென்‘ என்று. ‘ஆமென்’ என்பதன் பொருள் ‘ அப்படியே ஆகக்கடவது ‘. கொடுத்த வாக்கை மறக்க அவர் மனிதன் அல்ல, அவர் உங்களை சிருஷ்டித்த தேவன் நிச்சயமாய் கொடுத்த வாக்கை நிறைவேற்ற அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்.அல்லேலூயா ! இயேசுவை  நம்புங்கள் ! அவர் உங்களை நடுக்கடலில் தத்தளிக்க விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பவர் அல்ல, உங்கள் பிரச்சனையில் உங்களோடு நின்று உங்களை விடுவிப்பவர். ஆமென் ! அவர் ஒரு போதும் உங்களை வெட்க பட்டு போக விட மாட்டார்.தேவன் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்!

Will you give God Jesus a place in your heart ?

Behold,   I stand at the door and knock.   If anyone hears My voice and opens the door, I will come in to him and dine with him, and he with Me (Rev 3:20)

தேவன் இயேசுவுக்கு உங்கள் இருதயத்தில் இடம் கொடுப்பீர்களா?

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான் (வெளி 3 :20 ).ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே! தேவன் மனிதர்களை சிருஷ்டித்தது அவர்களோடு ஐக்கியம் வைத்துக்கொள்ளும் படியாகத்தான், அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுடைய இருதயத்தின் வாசற்படியிலே நின்று உங்களுடைய இருதயத்தின் கதவை அவருக்காக திறக்கும் படி தட்டுகிறார், நீங்கள் அவருடைய சத்தத்தை கேட்டு உங்களுடைய இருதயத்தின் கதவை அவருக்காக திறப்பீர்களானால் தேவன் உங்கள் இருதயத்துக்குள் பிரவேசித்து உங்களோடு போஜனம் பண்ணுவார் , நீங்களும் அவரோடு போஜனம் பன்னுவீர்கள்.உங்களுடைய இருதயத்தில் தேவன் இயேசுவுக்கு நீங்கள் இடம் கொடுப்பீர்களானால் தேவன் உங்கள் வாழ்க்கையை சந்தோஷத்தினாலும், நிம்மதியினாலும், சமாதானத்தினாலும் நிரப்பி ஆசீர்வதிப்பார்.ஆம

God has sown light and gladness for you

Light is sown for the righteous,And gladness for the upright in heart (Ps 97:11). 

தேவன் உங்களுக்கு வெளிச்சத்தையும், நன்மையையும் விதைத்திருக்கிறார்

நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது (சங் 97 :11). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே! கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையில் வெளிச்சத்தையும் மகிழ்ச்சியையும் விதைத்திருக்கிறார்.அவற்றின் பலனை ஒருவேளை நீங்கள் உடனடியாக காணாமல் போகலாம் ஆனால் விதைக்கப்பட்ட்து நிச்சயமாகவே ஏற்ற காலத்தில் முளைத்து எழும்பும். உதாரணமாக ‘ விதைக்கப்படட மாம்மர விதையானது’ ஒரு மரமாய் வளர்ந்து, பூத்து காய்த்து அது கனி கொடுக்க வருடங்கள் தேவைப்படுகின்றன அதுவரை பொறுமையோடு காத்து இருக்க வேண்டும் , அதே போலத்தான் உங்களுக்குரிய நன்மைகளை தேவன் ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார், அவற்றை ஏற்கனவே உங்களுக்காக முன்குறித்து விட்டார், அவற்றை உங்களுக்கென்று விதைத்து விட்டார். அதை எந்த மனிதர்களாலும், எந்த தீய சக்தியாலும்  தடை செய்ய முடியாது, ஆனால் அந்த மகிழ்சசி என்னும் விதை உங்களுக்கு பலன் தரும் வரை நீங்கள் பொறுமையோடு காத்திருக்க வேண்டியது

Those who earn wealth by lying

Getting wealth by a lying tongue Is the fleeting fantasy of those who seek death (Pro 21:6).

பொய்நாவினால் பொருளை சம்பாதிப்பவர்கள்

பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருக்கும் (நீதி 21 : 6).கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.பிரியமானவர்களே! இன்று ஜனங்கள் தாங்கள் ஐசுவரியவான்களாக வர வேண்டும் என்பதட்காக துன்மார்க்கமான வழிகளில் ஐசுவரியங்களை சம்பாதித்து கொள்ளுகிறார்கள், இப்படி பொய் நாவினால்  அநீதியாக ஐசுவரியங்களை சம்பாதி கிறவர்களின் வாழ்க்கையில் பணமிருக்கும் ஆனால் அவர்களுக்கோ வாழ்க்கையில் சமாதானம் , நிம்மதி , ஆறுதல் , சந்தோசம் , மகிழ்ச்சி இருக்காது. இவர்கள் வீட்டில் அநேக படுக்கை அறைகள் இருக்கும் ஆனால் அவர்களுக்கோ தூங்குவதட்கு தூக்கம் வராது, புசிப்பதட்கு போஜனமிருக்கும் ஆனால் அவர்களால் அதை புசிக்க முடியாத படி வியாதிகளோடும், வருத்தங்களோடும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.இப்படி பொய் நாவினால் பொருள்களை சம்பாதிக்கிறவர்கள் மனுஷனுடைய கோபத்தையும், சாபத்தையும்  சம்பாதிக்கிறார்கள், இவர்களுக்கு வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. அங்கும் , இங்குமாக சந்தோசம், சமாதா

The heart of man is in the hand of the Lord, Like the rivers of water

The king's heart is in the hand of the Lord, Like the rivers of water, he turns it wherever he wishes.

மனுஷனுடைய இருதயம் கர்த்தருடைய கரத்தில் நீர்க்கால்கள் போல் இருக்கின்றது

ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார் (நீதி 21 :1) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.பிரியமானவர்களே! மனுஷருடைய இருதயங்கள் கர்த்தருடைய கையில் இருக்கின்றது.மனுஷடய மனதை கர்த்தரால் தம்முடைய இஷ்டத்தின் பிரகாரமாக மாற்ற முடியும்.கர்த்தருக்கு சித்தமான காரியம் வாய்க்கும்.விவசாயம் பண்ணுகிறவர் நீர்க்கால்களைத் திருப்புவது போல் கர்த்தர் மனுஷரின் யோசனைகளை திருப்புகிறார். நீர்க்கால்கள் ஒரு திசையில் ஓடும் போது விவசாயி அதன் திசையைத் திருப்பி தனக்கு இஷ்டமான இடத்தில தண்ணீரை பாய செய்கிறார். மனுஷன் தன்னுடைய சித்தத்தின் பிரகாரம் யோசிக்கிறான்.தன் விருப்பத்தின் பிரகாரம் கிரியை செய்கின்றான்.மனுஷனுடைய சித்தம் எதுவாக இருந்தாலும் தேவனுடைய சித்தமே வாய்க்கும்.தேவனுடைய நோக்கமே நிறைவேறும்.தேவன் செய்ய நினைத்திருக்கிற காரியம் தடைபடாது.மனுஷனுக்கு சுயாதீன சித்தம் இருந்தாலும் அது தேவனுடைய சித்தத்துக்கு கீழ்ப்பட்ட