திரைக்குப் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டு செயல்படும் தேவன் (UK Lockdown - Day 100)

இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர் (ஏசா 45:15)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, ஏசாயா தீர்க்கதரிசி இங்கே தேவனை குறித்து ஒரு சத்தியத்தை வெளிப்படுத்துகிறார் “இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்“ என்று. 

ஆம் பிரியமானவர்களே, ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிற பிரகாரம்  நாம் ஆராதிக்கின்ற நம்முடைய ஆண்டவர் “திரைக்குப் பின்னால் மறைந்திருந்து கிரியைகளை நடப்பிக்கின்ற தேவனாக இருக்கின்றார்” அல்லேலூயா

பிரியமானவர்களே, அன்று இஸ்ரவேல் ஜனங்கள் நெருக்கத்திலிருந்த போது மறைந்திருந்து கிரியைகளை நடப்பித்து அவர்களுக்கு ஜெயத்தைக் கொடுத்த தேவன் இன்றும் நம்முடைய வாழ்க்கையில் அவ்வாறே செயல்படுகிறார், திரைக்குப் பின்னால் மறைந்திருந்து மனுஷர்களை, அதிகாரிகளை கருவியாக பயன்படுத்தி அவர்கள் மூலமாய் கிரியைகளை நடப்பித்து நம்முடைய வாழ்க்கையில் ஜெயத்தை கொடுக்கின்றார் அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.  

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?