வாழ்க்கையில் பிசாசுக்கு இடத்தை கொடுத்து விடாதீர்கள் (UK eased more lockdown restrictions - Day 113)

ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற் போனார்களென்று பார்க்கிறோம் (எபி 3:19)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, பிசாசானவன் தேவனுடைய பிள்ளைகளை தேவனிடமிருந்து பிரிக்க அவிசுவாசத்தை அவர்களுடைய இருதயத்தில் இந்நாட்களில் விதைத்து வருகிறான். ஆகவே தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் பிசாசுக்கு நம்முடைய இருதயத்தில் இடத்தை  கொடுத்து விடாது  மிகவும் விளிப்புள்ளவராகவும், ஜாக்கிரதையுள்ளவராகவும் இருக்க வேண்டும். அல்லேலூயா ! 

பிரியமானவர்களே, இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய வாழ்க்கையில்  தேவன் அவர்களுக்கு வாக்குப் பண்ணின தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசியாமல் பிசாசுக்கு தங்களுடைய இருதயத்தில் இடத்தை கொடுத்தினால் அவன் அவர்களுடைய இருதயத்தில் அவிசுவாசத்தை விதைத்ததன் நிமித்தம் அவர்களால் தேவன் அவர்களுக்கு கொடுப்பேன் என்று வாக்குப் பண்ணின பாலும், தேனும் ஓடுகின்றதான கானான் தேசத்துக்குள் பிரவேசிக்க முடியாமல் போனது, அவர்கள் எல்லாரும் வனாந்தரத்தில் அழிந்து போனார்கள். மாறாக தேவனையும், அவருடைய வாக்குத்தத்தத்தையும் விசுவாசித்த காலேபும், யோசுவாவும் தேவன் வாக்குப் பண்ணின கானான் தேசத்தை சுதந்தரித்துக் கொண்டார்கள். அல்லேலூயா ! 

ஆகவே பிரியமானவர்களே, தேவன் உங்களுக்கு வாக்குப் பண்ணின வாக்குத்தத்தங்களை, அவர் உங்களுக்கு கொடுப்பேன் என்று வாக்குப் பண்ணின தேசத்தை நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் சுதந்தரித்துக் கொள்ள வேண்டுமானால்  சூழ்நிலையை பார்த்து இது எப்படி சாத்தியமாகும் என்று அவிசுவாசமான வார்த்தைகளை பேசி தேவனை உங்களுடைய வாழ்க்கையில் துக்கப்படுத்தாமல், சகலத்தையும் படைத்த, சகலவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள், அவர் உலகத்தில் இருப்பவனைப் பார்க்கிலும் (பிசாசை பார்க்கிலும்) Home office அதிகாரிகளையும் பார்க்கிலும், உங்களுடைய பிரச்னையைப் பார்க்கிலும் பெரியவர், அவர் உங்களுக்கு வாக்குப் பண்ணின தேசத்தை உங்களுக்கு கொடுக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா! 

பிரியமானவர்களே, தேவனையும், அவருடைய வார்த்தையையும் விசுவாசியுங்கள். அல்லேலூயா ! 

வேதம்  சொல்லுகின்றது, விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும் (எபி 11:6) என்று,  அல்லேலூயா !

நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன் (மீகா 7:15)

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 


Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?