Posts

Showing posts from February, 2020

The hand of the Lord who kept you safe in the past

Image
I remember the days of old; I meditate on all Your works; I muse (ponder) on the work of Your hands ( Ps 143:5)

பூர்வநாட்களில் உங்களைப் பாதுகாத்த கர்த்தருடைய கரம்

Image
பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன் (சங் 143:5). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது தன்னுடைய வாழ்க்கையில் எதிரிகளினால் நெருக்கப்படும் போது பூர்வ நாட்களை (கடந்த நாட்களை) நினைத்துப் பார்க்கிறார், பூர்வ நாட்களில் கர்த்தர் அவருடைய வாழ்க்கையில் செய்த செய்களைத் தியானித்துப் பார்ப்பதோடு,  அவருடைய கரத்தின் கிரியைகளையும் யோசித்துப் பார்க்கிறார். ஆம் பிரியமானவர்களே, பூர்வ நாட்களில் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளை, அதிசயமான காரியங்களை ஒரு போதும் நாம்  மறந்து விடக்கூடாது, தாயின் கருவில் உண்டான நாள் முதல் இந்நாள் வரை கர்த்தர் நம் வாழ்க்கையில் அநேக நன்மைகளையும், அதிசயங்களையும் செய்தியிருக்கிறார், அவர் நம்மை மானிடனாக சிருஷ்டித்தது மாத்திரமல்ல அட்புதமாய் தாயின் கருவில் நம்மை பாதுகாத்து பூமியில் பிறக்க உதவி செய்தார், அது மாத்திரமல்ல, அவருடைய ந

Blessed is the man who trusts in the Lord

Image
Blessed is the man who trusts in the Lord, And whose hope is the Lord. For he shall be like a tree planted by the waters, Which spreads out its roots by the river (steam), And will not fear when heat comes; But its leaf will be green, And will not be anxious (it has no worries) in the year of drought, Nor will cease from yielding fruit (never fails to bear fruit) (Jer 17:7-8)

கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்திருக்கிற மனுஷன் பாக்கியவான்

Image
கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான் (எரேமி 17 : 7 - 8 ). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே,  கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக்கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் அவன் தண்ணீரண்டையில் நாட்டப்பட்ட மரத்தைப் போல் இருப்பான், இந்த மரம் நல்ல இடத்தில் நாட்டப் பட்டிகிறபடியால் (1)  கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விட்டு எப்போதும் இந்த மரம் உறுதியாய் நிலைத்திருக்கும் - இந்த மரத்துக்குத் தேவையான தண்ணீர் கால்வாயிலிருந்து தாராளமாய் கிடைக்கும், இப்படிப் பட்ட மரத்திற்கு எந்த குறைவும் உண்டாகாது, கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத்

Fear not, Be glad and rejoice, For the Lord will do great things

Image
Fear not, O land; Be glad and rejoice, For the Lord will do great things (Joel 2:21)

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

Image
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் (யோவே 2: 21). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் தன்னுடைய தீர்க்கதரிசியான யோவேல் மூலம் யூதா தேசத்துக்கு ஒரு வாக்குத்தத்ததை கொடுத்தார் ‘தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்’ என்று. ‘தேசமே பயப்படாதே’ என்பதன் அர்த்தம் ‘யூதா ஜனங்களே பயப்படாதே’ என்பதே. கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளாகிய யூதா ஜனங்களைப் பார்த்துச் சொல்லுகிறார் ‘யூதா ஜனங்களே (தேசமே) பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்’ என்று. இன்று இந்த வாக்குத்தத்தமானது இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக, இரச்சகராக தங்களுடைய வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு அவருடைய பரிசுத்த இரத்தத்தினால் கழுவப்பட்ட அவருடைய பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக இருக்கின்றது. அல்லேலூயா ! பிரியமானவர்களே, ஒரு வேளை நீங்கள் செல்லுகின்றதான சூழ்நிலை உங்களுக்க

“Am I a God near at hand,” says the Lord, And not a God afar off?

Image
Am   I a God near at hand,” says the  Lord , And  not a God afar off? (Jer 23:23)

நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ

Image
நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி 23:23). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் சர்வவல்லமை நிறைந்தவர், மனுஷர்களால் முடியாத காரியத்தை கர்த்தர் செய்கிறார், மனுஷர்களாகிய நம்மை பொறுத்த வரையில் சமீபமாய் இருப்பதும், தூரமாய் இருப்பதும் இரண்டு வெவேறு காரியங்கள், நம்மால் தூரத்தில் நடக்கின்ற காரியங்களை பார்க்கவும் முடியாது, கேட்கவும் முடியாது, ஆனால் நம்முடைய ஆண்டவரினால் தூரத்தில் நடக்கிற காரியங்களை பார்க்கவும் முடியும், கேட்கவும் முடியும், மனுஷர்களாகிய நம்மால் இருட்டில்   ஒன்றையும் பார்க்க முடியாது, ஆனால் கர்த்தருக்கோ எல்லாம் வெளியரங்கமாய் இருக்கின்றது, அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை, அவர் ஒரே வேளையில் எல்லா இடங்களிலும் இருக்கிறவர், கர்த்தர் சர்வ வல்லமை நிறைந்தவர். தூர தேசத்தில் இருக்கும் உங்கள் பிள்ளைகளால் நீங்கள் அவர்களுக்காய் ஜெபிக்கும் ஜெபத்தை கேட்க மு

For the Lord will not cast off forever

Image
For the Lord will not cast off forever (Lam 3:31)

ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்

Image
ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார் (புல 3:31). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, யூதா ஜனங்கள் பாபிலோன் தேசத்தில் சிறைக் கைதிகளாக எடுத்துச் செல்ப் பட்டு அங்கே சிறைக் கைதிகளாக இருந்த போது அவர்கள் பலதரப்பட்ட பிரச்னைகளுக்கூடாக, நெருக்கங்களுக்கூடாக, பாடுகளுக்கூடாக சென்று கொண்டிருந்த போது அவர்கள் ஆண்டவர் தங்களைக் கை விட்டு விட்டார் என்று நினைத்தார்கள், ஆனால் உண்மை அதுவல்ல பிரியமானவர்களே, ஆண்டவர் ஒரு போதும் தன்னுடைய பிள்ளைகளைக் கை விடுவதில்லை, யூதா செய்த பாவத்தின் நிமித்தம் தேவன் அவர்களை அந்நியர்களின் கைக்கு ஒப்புக் கொடுத்திருந்ததோடு, அந்த காலப் பகுதியில் தேவன் அவர்களுக்கு தன்னுடைய முகத்தையும் மறைந்திருந்தார், ஆனால் அது தட்க்காலிகமே, வேதம் சொல்லுகிறது ‘அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ ஆயுள் காலம் வரை’ (சங் 30:5) என்று. பிரியமானவர்களே, நீங்களும் உங்களுடைய சூழ்நிலை இறுக்கமாக இருக்கிறதினால் நீங்களும் யூதாவைப

Whoever comes to me I will never drive (cast) away

Image
Whoever comes to me I will never drive (cast) away (John 6:37 b)

என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை

Image
இயேசு அவர்களை நோக்கி ‘என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை’ (யோவா 6:37b). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து இனம், மதம், மொழி, சாதி, ஏழை, பணக்காரன், என்று மனுஷர்களை அவர் பிரித்துப் பார்ப்பதில்லை, யாரெல்லாம் அவரை விசுவாசித்து  அவரிடம் செல்லுகிறார்களோ அவர்களை அவர் ஒரு போதும் புறம்பே தள்ளுவதில்லை, அவர்களை அவ்வண்ணமாக ஏற்றுக்கொள்ளுகின்றார். அல்லேலூயா ! பிரியமானவர்களே, உங்களுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து மீது விசுவாசம் இருக்கின்றதா? தேவன் இயேசு கிறிஸ்துவை  நீங்கள் விசுவாசித்து அவரிடம் செல்லும் போது அவர் உங்களை அவருடைய பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுவதோடு உங்களுடைய மனக் கவலைகளை, உங்களுடைய பாரங்களை, உங்களுடைய வியாதிகளை, உங்களுடைய பிரச்சனைகளை அவர் தீர்த்து வைக்க தேவன் இயேசு உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

I would rather be a doorkeeper in the house of my God

Image
I would rather be a doorkeeper in the house of my God, than dwell in the tents of wickedness (Ps 84:10 b)

என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்

Image
ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன் (சங் 84:10 b). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இந்த சங்கீத்தை எழுதிய சங்கீதக்காரன் தான் ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைக் காட்டிலும் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதை தனக்கு மேன்மையாக எண்ணுகிறார்.  ஆகாமியக் கூடாரம் ஆடம்பரமானது, கவர்சீகரமானது, இன்பமானது ஆனால் தாவீதோ நான் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன் என்று சொல்லுகிறார். ஆலயத்தின் வாசற்படியில் பிச்சைக்காரர்கள் தான் வழமையாக உட்க்கார்ந்திருப்பார்கள், அப்போஸ்தலர் 3:2 ல் வாசிக்கிறோம் அப்பொழுது ‘தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு வந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்

God longs for the repentance of the wicked

Image
Do I have any pleasure at all that the wicked should die?” says the Lord God, “and not that he should turn from his ways and live? ( Eze 28:23)

துன்மார்க்கனின் மனந்திரும்புதலுக்காக ஏங்கும் தேவன்

Image
துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் (எசேக்கி 18 :23). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, நீதிமானாக இருந்தாலும் சரி, துன்மார்க்கனாக இருந்தாலும் சரி யாருமே அழிந்து போவது கர்த்தருக்கு பிரியமல்ல, அதனால் தான் அவர் சொல்லுகிறார் துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று அல்லேலூயா ! ஆம்  பிரியமானவர்களே, துன்மார்கன் தன் வழிகளை0 விட்டுத் திரும்பிப் பிழைக்க வேண்டுமென்று கர்த்தர் பிரியப்படுகிறார்.அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

God has prepared many blessings for those who love Him

Image
But as it is written: ‘ Eye has not seen, nor ear heard, nor  have entered into the heart of man, the things which God has prepared for those who love Him’ (1 Cor 2:9)

தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களை ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார்

Image
எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை (1கொரி 2:9). ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவன், அவருக்காய் காத்திருந்தவர்களுக்கு, அவரில் அன்பு கூறுகிறவர்களுக்கு அநேக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும், அநேக பூலோக ஆசீர்வாதங்களையும் ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார், ஆனால் அவற்றை நமது மாமிச கண்களினால் காணவும் முடியாது, அவற்றை நமது காதுகளினால் கேட்கவும் முடியாது, அவைகள் மனுஷனாகிய நம்முடைய  இருதயத்தில் தோன்றவுமில்லை. இதைத்தான் நாம் ஏசாயா 64:4   இல் இவ்வண்ணமாக வாசிக்கிறோம்   ‘தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றமுதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை’ என்று. அல்லேலூயா ! அவருடைய கிரியைகள் பெரியவைகளாகவும், பயங்கரமானவைகளாகவும் இர

But It’s good for me to draw near to God

Image
But it is good for me to draw near to God (Ps 73:28 a)

எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்

Image
எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம் (சங் 73:28 a) ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, இந்த சங்கீதத்தை ஆசாப் எழுதியிருக்கிறார், இவர் தாவீது ராஜாவின் நாட்களில் எருசலேம் தேவாலயத்தின் பாடல் குழுவின் தலைவராக (choir leader) இருந்தார். இவர் சொல்லுகிறார் ‘எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்’  என்று. ஆம் பிரியமானவர்களே, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே எனக்கும், உங்களுக்கும் நலமான காரியம். எந்த அளவு நாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவருடைய சித்தத்தைச் செய்து அவரை அண்டிக்கொண்டிருக்கிறோமோ அந்த அளவு தேவனும் நமக்கு அருகாமையில் வந்து , அவர் நமக்கு நல்ல பாதுகாவலராக இருந்து நம்மை எல்லா தீங்குக்கும், ஆபத்துக்கும், கொடிய நோய்களுக்கும் விலக்கிப் பாதுகாத்துக் கொள்ளுவார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.   

For God spoke, and it was done; He commanded,and it stood fast

Image
For He (God) spoke, and it was done; He commanded, and it stood fast (Ps 33:9)

கர்த்தர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்

Image
அவர் (கர்த்தர்) சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும் (சங் 33:9). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே. , தேவன் வார்த்தையினால் சர்வலோகத்தையும் சிருஷ்ட்டித்தார். அவருடைய வார்த்தையில் வல்லமையுள்ளது. அந்த தேவன் இயேசு இந்த பூலோகத்தில் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் கடலில் தன்னுடைய சீஷர்களோடு பயணித்துக் கொண்டிருந்த போது எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்று சொன்ன போது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டானது என்று வேதத்தில் வாசிக்கிறோம் ( மாற்கு 4:39). அவருடைய வார்த்தையில் வல்லமையிருக்கின்றது. காற்றையும், கடலையும் அதட்டி அமைதிப் படுத்திய கர்த்தரால் கடலைப் போல் தத்தளித்து கொந்தளித்துக் கொண்டிருக்கிற உங்களுடைய வாழ்க்கை சூழ்நிலையையும் அமைதல்படுத்த அவரால் முடியும், அவர் ஒரு வார்த்தை உங்களை நெருக்கிக் கொண்டிருக்கிற சூழ்நிலையைப் பார்த்து அமைதலாயிரு என்று சொன்னால் அது ஆகும், அவர் கட்டளையிட்டால் அது நிற

A word fitly spoken is like apples of gold in settings of silver

Image
A word fitly spoken (A word spoken at the right time) is like apples of gold in settings of silver (Pro 25:11)

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்

Image
ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம் (நீதி 25:11). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே. சாதாரண தட்டில் வைக்ககப்பட்டிருக்கிற பழங்களுக்கும், வெள்ளித்தட்டில் வைக்ககப்பட்டிருக்கிற பொற்பழங்களுக்கும் வித்தியாசம் உண்டு. சாதாரண தட்டில் வைக்ககப்பட்டிருக்கிற பழங்களப்பார்க்கிலும் வெள்ளித்தட்டில் வைக்ககப்பட்டிருக்கிற பொற்பழங்களை எல்லாரும் விரும்புவார்கள். அதே போலத்தான் நாம் பிறருக்கு கொடுக்கின்றதான ஆலோசனைகளும், புத்திமதிகளும் ஏற்ற சமயத்தில், ஏற்ற காலத்தில் கொடுக்கப்படுகின்றதாக இருக்க வேண்டும், அவ்வாறு ஏற்ற சமயத்தில் சொன்ன புத்திமதிகளை, ஆலோசனைகளை இங்கே சாலமோன் வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானமாக கூறுகின்றார். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

Not a word failed of any good thing which the LORD had spoken

Image
Not a word failed of any good thing which the LORD had spoken to the house of Israel. All came to pass (Josh 21:45)

தேவன் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை

Image
கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று (யோசு 21:45). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, நம்முடைய தேவன் தான் கொடுத்த வாக்குத்தத்தில் உண்மையுள்ளவராக இருக்கிறார். மனுஷர்களாகிய நாங்கள் பல வேளைகளில் நாம் வாக்குப் பண்ணினதை எங்களால் நிறைவேற்ற முடியாமல் போய் விடுகிறது, ஆனால் தேவன் அப்படிப்பட்டவரல்ல எதை நமக்கு செய்வேன் என்று வாக்குப் பண்ணினாரோ அதை அவர் செய்து முடிகிறவராக இருக்கிறார். ‘கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று’ என்று வேதம் சொல்லுகிறது. அல்லேலூயா ! தேவன் ஆபிரகாமின் சந்ததிக்கு கானான் தேசத்தைக் கொடுப்பதாக வாக்குப் பண்ணியிருந்தார், ஆனால் அவர்களுடைய  கீழ்ப்படியாமையின் நிமித்தம் அவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வியும், அலைச்சலும் உண்டாகி த

Have I therefore become your enemy because I tell you the truth?

Image
Have I therefore become your enemy because I tell you the truth? (Gal 4:6)

நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?

Image
நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ? (கலா 4 : 16). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் சத்தியத்தைச் சொல்லும் படியாக அழைக்கப்பட்டிருக்கிறோம். எந்த சூழ்நிலையிலும் நாம் சத்தியத்தை சொல்லாமல் சமரசம் ஆகிவிடக் கூடாது.சத்தியத்தைச் சொன்னதினாலே பவுலுக்கு அநேக சத்துருக்கள் எழும்பினார்கள். ஆனால் அவரை எவையும் சத்தியத்தைச் சொல்லுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதே போல் கர்த்தருடைய ஊழியக்காரராகிய நாமும் கர்த்தர் நமக்குக் கொடுக்கிற வார்த்தையை முகத்தாட்சணீயம் இல்லாமல், பாராபட்ச்சமில்லாமல், மற்றவர்கள் நம்மோடு கோபித்து விடுவார்கள் என்று நினைக்காமல் கர்த்தருடைய சத்தியத்தை உபதேசம் பண்ண வேண்டும். இவ்வாறு நீங்கள் கர்த்தருடைய சத்தியத்தை அதிகமாய் உபதேசிக்கும் போது உங்களுக்கு ஊழியத்தில் அநேக சத்துருக்கள் எழும்புவார்கள், ஆனால் நீங்கள் மற்றவர்களுடைய மனது நோகுமே என்று நினைத்து

Don’t provoke your children to anger, lest they be discouraged

Image
Fathers, provoke not your children to anger, lest they be discouraged (Col 3:21)

உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்

Image
பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள் (கொலோ 3:21). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவனாகிய கர்த்தர் பெற்றோர்களுக்குக் கொடுக்கும் ஆலோசனை ‘ உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி,  அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்’ என்று. ஆம் பிரியமானவர்களே, பெற்றோர்களாகிய நமக்கு தேவன் அதிகாரம் கொடுத்திருக்கிறார் ஆனால் அந்த அதிகாரத்தை நாம் பிழையாக,  கொடூரமாக பயன்படுத்தி விடக்கூடாது, நாங்கள் அவர்களை அதிகமாக கோபமூட்டக் கூடாது, நாங்கள் அவர்களை அதிகமாக கோபமூட்டும் போது, அவர்கள் மீது எப்போதும் எரிந்து விழும் போது, அவர்கள் திடனற்றுப் போவார்கள். வேதம் சொல்லுகிறது, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் (சங் 127:4) என்று. அவர்களை தேவன் நமக்கு ஆசீர்வாதமாக கொடுத்திருக்கிறார். ஆகவே பிரியமானவர்களே,     உங்களுடைய பிள்ளைகள் மீது நீங்கள் எப்போதும் எரிந்து விழாமல், நீங்கள் அவர்கள் மீது எப்போதும் கோபமான வ

It’s nothing (easy) for the Lord to help the mighty and the weak

Image
Asa cried out to the LORD his God, and said, “LORD, it is nothing for You to help, whether with many (mighty) or with those who have no power (strength); help us, O LORD our God, for we rest on You (2 Chro 14:11)

பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது கர்த்தருக்கு லேசான காரியம்

Image
ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும் (2நாளா 14:11). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, சாலொமோனின் புதல்வன் ரெகொபெயாம் ஆட்சி காலத்தில் இஸ்ரவேல் தேசமானது, வடக்கு ராஜ்ஜியம் (10 கோத்திரம்)  , தெட்க்கு ராஜ்ஜியம் ( 2 கோத்திரம்) என  இரண்டாகப் பிளக்கப்பட்ட்து. 10  கோத்திரங்களைக் கொண்ட வடக்கு ராஜ்ஜியம் இஸ்ரவேல் தேசம் (சமாரியா தலைநகரம்) என்றும், 2 கோத்திரங்களைக் கொண்ட தெட்க்கு ராஜ்ஜியம் யூதா தேசம் (எருசலேம் தலைநகரம்) என்றும் அழைக்கப்பட்டது. எருசலேமை தன் தலைநகராகக் கொண்ட யூதா தேசத்தை ஆட்சி செய்த 3 வது ராஜா தான் ஆசா. இவன் 41 ஆண்டுகள் தேசத்தை ஆட்சி செய்ததாகவும் அவனுக்கு யூதாவிலே பரிசையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற

By my God I can leap over a wall

Image
For by you I can advance (run) against a troop; and by my God I can leap over a wall (Ps 18:29)

என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்

Image
உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன் (சங் 18:29). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது இந்த 18 வது சங்கீதத்தை எழுதியிருக்கிறார். தாவீது இஸ்ரவேல் தேசத்தை 40 வருடங்கள் ஆட்சி செய்தார்ர். அவர் வாழ்க்கையில் தேவனை உண்மையாக நேசித்தார். அவர் ஆடு மேய்க்கும் சிறுவனாக இருந்த போதும் அவர் கர்த்தரையே சார்ந்து வாழ்ந்தார், கர்த்தருடைய பெலத்தினாலே கோலியாத்தை யுத்தத்தில் ஜெயித்தார், அது மாத்திரமல்ல அவர் இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த காலங்களிலும் கூட அவருக்கு அநேக யுத்த வீரர்கள், படைகள் இருந்த போதிலும், அவர் தனது சேனைகளின் பெலத்திலோ, அவருடைய  திறமையிலோ சார்ந்து வாழவில்லை, மாறாக அவர் தனது எல்லா சூழ்நிலைகளிலும் தேவனையே சார்ந்து, அவரையே நம்பி, அவருடைய பெலத்திலே வாழ்ந்தார், அவர் தான் ஆராதிக்கிற, விசுவாசிக்கிற தேவனைக் குறித்தும் , அவருடைய வல்லமையைக் குறித்தும் நன்கு அறிந்திருந்ததோடு, கர்த்தருடைய பெ

The breaker (He who removes) of obstacles goes before you

Image
The breaker shall go up before them, They have broken up, and have passed through the gate and go out; So their King goes on before them (Micah 2:13)

தடைகளை நீக்கிப்போடுகிறவர் உங்களுக்கு முன்பாக செல்லுகிறார்

Image
தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார். அவர்கள்  தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார் (மீகா 2:13). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய தீர்க்கதரிசி  மீகா இஸ்ரவேல் ஜனங்களுக்கு அவர்கள் ஆராதிக்கின்ற தேவனைக் குறித்துச் சொல்லும் போது சொல்லுகிறார், தேவன் அவர்களுக்கு முன்பாக இருக்கின்ற தடைகளை  நீக்கிப்போடுகிறவர் என்றும், அவர் அவர்களுக்கு (இஸ்ரவேல் ஜனங்களுக்கு) முன்பாக நடந்துபோகிறார் என்றும், அவர்கள் (இஸ்ரவேல் ஜனங்கள்) தடைகளை எல்லாம் நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள் என்றும், அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார் என்றும், அவர்களுடைய கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்‘ என்றும். அல்லேலூயா ! ஆம் பிரியமானவர்களே, நாம் ஆராதிக்கின்ற நம்முடைய ஜீவனுள்ள தேவன் இயேசுவுக்

My Presence will go with you, and I will give you rest

Image
And He said, “My Presence will go with you, and I will give you rest.” (Exo 33:14) 

என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்

Image
அதற்கு அவர் (கர்த்தர்) : என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். (யாத்தி 33 : 14 ). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர், எகிப்தின் அடிமைத் தனத்தில் இருந்த தன்னுடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கவும், அவர்களை தான் வாக்குப் பண்ணின பாலும், தேனும் ஓடுகிற கானான் தேசத்துக்குள் அவர்களை வழிநடத்திச் செல்லவும் மோசேயை அவர்களுக்கு தலைவனாக எழுப்பியிருந்தார், மோசேயும் கர்த்தருடைய சமூகத்தில் காத்திருந்து ஜெபித்து கர்த்தர் கொடுக்கும் ஆலோசனைப்படி இஸ்ரவேல் ஜனங்களை  எகிப்தில் இருந்து கானானை நோக்கி வழி நடத்தி வருகின்றார், இவ்வாறான சூழ்நிலையில் தான் கர்த்தருடைய சமூகத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்காக பரிந்து பேசும் போது கர்த்தர் மோசேயிடம் ‘என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று கூறுகின்றார். அல்லேலூயா ! ஆம் பிரிய

I have engraved (graven/inscribed) you upon the palms of my hands

Image
Behold, I have engraved (graven/inscribed) you upon the palms of my hands; your walls are continually before me (Isa 49:16)

என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்து வைத்திருக்கிறேன்

Image
இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன் (ஏசா 49:16). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய யூதா ஜனங்கள் தாங்கள் இருந்த சூழ்நிலையின் நிமித்தம் கர்த்தர் அவர்களைக் கை விட்டுவிட்டார் (49:14) என்று புலம்பிக் கொண்டிருந்த போது, கர்த்தர் அவர்களைப் பார்த்து சொல்லுகிறார் ‘ஸ்திரீயானவள் தன்  கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை’ (49:15). இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது (49:16) என்று. அல்லேலூயா ! பிரியமானவர்களே, பால் குடிக்கும் பாலகனை தாய் மறந்து போவாளோ? இல்லை, தாய் தன் பாலகனை குறித்து எப்போதும் சிந்தித்தவளாக, அவன்/ அவள் மீது அன்புள்ளவளாகவே இருக்கின்றாள். ஆனாலும், சில நாடுகளில் தாய் தான் பெற்ற பிள்ளையைக் கைவிட்டாள் என்ற செய்திகளையும் கேட்கின்றோம், ஆனால் அது அபூர்வமான செய்தியாக இருக்கின்றது.

Be in the fear of the Lord all day long

Image
Be in the fear of the Lord all the day long (Pro 23:17 b)

நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிருங்கள்

Image
நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு (நீதி 23:17 b). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் கர்த்தருக்குப் பயப்படுகிற இருதயமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த உலகமானது நிரந்தரமானதல்ல இது தட்காலிகமானது, ஆகவே இந்த உலகத்தில் நாம் நம்முடைய இஷ்டப்படி வாழலாம் என்று நினைத்து துன்மார்க்கத்தனமாய் வாழாமல், நாம் இந்த உலகத்தில் பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் கர்த்தருடைய வார்தைக்குக் கீழ்ப்படிந்து, அவருக்குப் பயப்படுகிற பயத்துடனே நடந்து கொண்டு (1பேதுரு 1:17 ) கர்த்தருடைய சித்தத்தை நம் வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டும். அல்லேலூயா ! வேதத்தில் ஒரு சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது,   போத்திபாரின் மனைவி யோசேப்பை தன்னுடன் சயனிக்குமாறு கட்டாயப்படுத்திய போது ‘ வாலிப பருவத்தில் இருந்த யோசேப்பு கர்த்தருக்கு விரோதமாக அந்த பாவத்தை செய்ய துணியாமல் ,தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது

Hundredfold reap

Image
Then Isaac sowed in that land, and reaped in the same year a hundredfold; and the Lord blessed him (Gen 26:12)

நூறுமடங்கு பலன்

Image
ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான் (ஆதி 26:12). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, ஈசாக்கு தேசத்தில் விதை விதைத்த காலம் நீங்கள் நினைக்கிறது போல் செழிப்பான காலமல்ல, அது பஞ்சத்தின் காலம். ஆனால் ஈசாக்கை தேவன் ஆசீர்வதித்ததினால் அந்த வரு‌ஷத்தில் அவர் நூறு மடங்கு பலன்  அடைந்தார். அல்லேலூயா ! பிரியமானவர்களே, யார் மீதெல்லாம் கர்த்தருடைய கரம் இருக்கின்றதோ அவனுடைய வாழ்க்கை ஆசிர்வதிக்கப்படும். கர்த்தருடைய ஆசிர்வதிக்கின்ற கரம் ஈசாக்கின் மேலிருந்த படியால் அவர் பஞ்ச காலத்தில் விதை விதைத்தும் அந்த வருஷத்தில் அவர் நூறு மடங்கு பலன் அடைந்தார். அல்லேலூயா ! நீங்களும் உங்களுடைய வாழ்க்கையில் ஈசாக்கைப் போல் தியானிக்கிற மனுஷனாக, ஜெபிக்கிற மனுஷனாக வாழ்ந்து கர்த்தரை பிரியப்படுத்தும் போது, கர்த்தர் உங்களுடைய வியாபாரத்தில், உங்களுடைய தொழிலில், உங்களுடைய வேலையில

The Lord, a great physician

Image
And in the thirty-ninth year of his reign, Asa became diseased in his feet, and his malady was severe; yet in his disease he did not seek the Lord, but the physicians (2 Chro 16:12)

கர்த்தரே பரம வைத்தியர்

Image
ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான் (2நாளா 16:12). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, சாலொமோனின் புதல்வன் ரெகொபெயாம் ஆட்சி காலத்தில் இஸ்ரவேல் தேசமானது, வடக்கு ராஜ்ஜியம் (10 கோத்திரம்)  , தெட்க்கு ராஜ்ஜியம் ( 2 கோத்திரம்) என  இரண்டாகப் பிளக்கப்பட்ட்து. 10  கோத்திரங்களைக் கொண்ட வடக்கு ராஜ்ஜியம் இஸ்ரவேல் தேசம் (சமாரியா தலைநகரம்) என்றும், 2 கோத்திரங்களைக் கொண்ட தெட்க்கு ராஜ்ஜியம் யூதா தேசம் (எருசலேம் தலைநகரம்) என்றும் அழைக்கப்பட்டது. தெட்க்கு ராஜ்யமான யூதாவை ஆட்சி செய்த 3 வது ராஜா தான் ஆசா. இவன் தன்னுடைய ராஜ்ய பாரத்தின் ஆரம்ப நாட்களில் கர்த்தரையே சார்ந்து, அவருக்கு பிரியமானவற்றை மாத்திரமே செய்தான். ஆனால் அவனது ராஜ்ஜிய பாரத்தின் 36வது வருஷத்தில் இஸ்ரவேலின் ராஜா பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்த ப

Children are a heritage from the Lord

Image
And he (Esau) lifted his eyes and saw the women and children, and said, “Who are these with you?” So he (Jacob) said, “The children whom God has graciously given your servant.” (Gen 33:5)

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்

Image
அவன் (ஏசா) தன் கண்களை ஏறெடுத்து, ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன் (யாக்கோப்பு) : தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான் (ஆதி 33:5). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, ஏசாவும், யாக்கோபும் சகோதரர்கள், பல வருடங்களுக்குப் பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் சந்திக்கிறார்கள், அப்பொழுது ‘ஏசா தன் கண்களை ஏறெடுத்து, ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான்.  அதற்கு யாக்கோப்பு தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான்’ . தேவனுடைய முதல் சிருஷ்டிப்புகளான ஆதாமுக்கும், ஏவாளுக்கும் பிள்ளை (காயின்) பிறந்த போது, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றே ஏவாள் (ஆதி 4:1) சொன்னாள்.  ஆம்  பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது ‘ இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் (சங் 127:5) என்று. அல்லேலூயா !  பிரியமா

Have mercy on me, O Lord

Image
O Lord, do not rebuke me in Your anger, Nor chasten me in Your hot displeasure. Have mercy on me, O Lord, for I am weak; O Lord, heal me, for my bones are troubled. My soul also is greatly troubled; But You, O Lord—how long? (Ps 6:1-3)

கர்த்தாவே என்மேல் இரக்கமாயிரும்

Image
கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும். என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன. என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் (சங் 6:1-3). ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள மூன்று வேத வசனங்களையும் இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது ராஜா வாழ்க்கையில் பாடுகளுக்கூடாகவும், நெருக்கங்களுக்கூடாகவும், வேதனைகளுக்கூடாகவும் கடந்து சென்று கொண்டிருந்த போது அவருடைய சரீரம் பெலனற்றுப் போய் வியாதிப்பட்டிருந்ததோடு, அவருடைய ஆத்துமாவும் வியாகுலப்படுகிறது. அவரால் அவர் சந்திக்கும் பிரச்சினைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை, சரீரம் பெலவீனப்பட்டிருக்கிறது, அவருடைய எலும்புகள் நடுங்குகிறது, எலும்புகள். நடுங்கும் அளவுக்கு அவர் வயது சென்று முதிர்வயதிலும் இருக்கவில்லை, ஒரு நடுத்தர வயதில் தான் இருந்தார், ஆனால்