Posts

Showing posts from June, 2020

My people have forgotten me, days without number (UK Lockdown - Day 99)

Does a young woman forget her jewelry, a bride her wedding ornaments? Yet my people have forgotten me, days without number (Jer 2:32)

என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள் (UK Lockdown - Day 99)

ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள் (எரேமி 2:32) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, “ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்“ என்று கர்த்தர் தன்னுடைய மனப் பாரத்தை, தன்னுடைய கவலையை தீர்க்கதரிசி  எரேமியாவின் மூலமாய்  யூதா ஜனங்களுக்கு கூறுகிறார்.  ஆம் பிரியமானவர்களே, யூதா ஜனங்கள் கர்த்தரையும், அவர் அவர்களுடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளையும், கிரியைகளையும் வாழ்க்கையில் மறந்து ஜீவித்தார்கள்.  பிரியமானவர்களே, யூதா ஜனங்களை போல் நாம் இராமல், எவ்வாறு ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறவாமல் இருக்கிறாளோ அதே போல் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் கர்த்தரை ஒரு போதும் எங்களுடைய வாழ்க்கையில் மறவாமல் இருந்து, ஒவ்வொரு நாளும், ஒவ

UK Lockdown - Day 98

Couldn’t write the word of God today due to some unavoidable reasons. Sorry for the inconvenience. Thank you. 😢

UK Lockdown - Day 98

தவிர்க்க முடியாத சில காரணங்களினால்  இன்றைய தின மன்னாவை எழுத முடியவில்லை, சிரமத்துக்கு மன்னிக்கவும் 😢

Fear God, and keep his commandments (UK Lockdown - Day 97)

Fear God, and keep his commandments: for this is the whole duty of man (Ecc 12:13)

தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள் (UK Lockdown - Day 97)

தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே (பிர 12:13) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாகிய நாங்கள் இந்த பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நன்கு அறிந்திருக்க வேண்டும் நாங்கள் இந்த பூலோகத்துக்குரியவர்கள் அல்ல, நாங்கள் பரலோகத்துக்குரியவர்கள், நாங்கள் தேவனால் இந்த பூலோகத்திலிருந்து அவருக்காக பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்த ஜாதிகள் என்று, அல்லேலூயா !  பிரியமானவர்களே,பாபிலோன் தேசத்தில் சிறைக் கைதியாக இருந்த தானியேல் தன்னுடைய வாலிப பருவத்தில் இருந்தே தேவனுக்காக வைராக்கியமாக வாழ்ந்தார், அவர் தன்னுடைய வாழ்க்கையை சூழ்நிலைக்கேட்ப இசைந்து விட்டுக் கொடுக்கவில்லை, எல்லாச் சூழ்நிலையிலிலும் அவர் தேவனுக்குப் பயந்து, தேவனுடைய கற்பனைகளைக் கைக் கொண்டு தேவனுக்காக வைராக்கியமாக வாழ்ந்தார். அல்லேலூயா !  ஆகவே பிரியமானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாகிய  நாங்களும் இந்த

Let the favour of the Lord our God be upon us (UK Lockdown - Day 96)

Let the favour of the Lord our God be upon us (Ps 90:17)

எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள் மேல் இருப்பதாக (UK Lockdown - Day 96)

எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள் மேல் இருப்பதாக (சங் 90:17) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய தாசனாகிய மோசே “எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள் மேல் இருப்பதாக” என்று மனதுருகி தேவ சமூகத்தில் ஜெபிக்கிறார்.  பிரியமானவர்களே, பிரியம் என்னும் பதத்துக்கு விருப்பம், அன்பு, தயவு, இரக்கம் என்று அநேக அர்த்தங்கள் உண்டு.  பிரியமானவர்களே, தேவன் தாவீதைக் குறித்து “ ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான்” (அப்போ 13:22 ) என்று சாட்சி கொடுத்தார்.  பிரியமானவர்களே, தாவீது வாழ்க்கையில் தேவனுக்கு பிரியமானவற்றை செய்து அவரை  பிரியப்படுத்தினதால் தேவனுடைய பிரியம், தயவு, இரக்கம் தாவீதுக்கு வாழ்க்கையில் கிடைத்தது. அல்லேலூயா !  பிரியமானவர்களே, நாங்களும் மோசேயைப் போல், தாவீதை போல், தானியலைப் போல் தேவனுக்கு பிரியமானவற்றை, விருப்பமானவற்ற

The Lord is our refuge and stronghold in our times of danger (UK Lockdown - Day 95)

But the Lord will be a shelter/refuge for His people, And the strength/stronghold of the children of Israel (Joe 3:16)

ஆபத்து வேளையில் கர்த்தரே நமது அடைக்கலமும், அரணான கோட்டையும் (UK Lockdown - Day 95)

ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார் (யோவே 3:16 b) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு இந்த பூலோகத்தில் பாடுகளும், உபத்திரவங்களும் உண்டு, ஆனால் நாம் ஆராதிக்கின்ற நம்முடைய கர்த்தர் இயேசு கிறிஸ்து  ஜீவனுள்ளவராக இருப்பதினால் இந்த பூலோகத்தின் பாடுகள் நம்மை ஒரு போதும் மேட்கொள்ளுவதில்லை, கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் அடைக்கலமாகவும், அரணாகவும் இருந்து நம் ஒவ்வொருவரையும் நம்முடைய பிரச்சனைகளிலிருந்து, நம்முடைய உபத்திரவங்களிலிருந்து, நம்முடைய பாடுகளிலிருந்து விடுதலை செய்ய அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! பிரியமானவர்களே, கர்த்தரை எக்காலத்திலும் நம்பியிருங்கள், அவர் ஒரு போதும் உங்களை விட்டு விலகவும் மாட்டார், கை விடவும் மாட்டார். அல்லேலூயா !  கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்ப

UK Lockdown - Day 94

Couldn’t write the word of God today due to some unavoidable reasons. Sorry for the inconvenience. Thank you. 😢

UK Lockdown - Day 94

தவிர்க்க முடியாத சில காரணங்களினால்  இன்றைய தின மன்னாவை எழுத முடியவில்லை, சிரமத்துக்கு மன்னிக்கவும் 😢

Know that trials can produce endurance and consider it all joy (UK Lockdown - Day 93)

Consider it nothing but joy, my  [ a ] brothers and sisters, whenever you fall into various trials.  3  Be assured that the testing of your faith [through experience] produces endurance [leading to spiritual maturity, and inner peace] (Jam 1:2-3)

சோதனைகள் பொறுமையை உண்டாக்கும் என்று அறிந்து அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் (UK Lockdown - Day 93)

என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் (யாக் 1:2-3 ) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, வாழ்க்கையில் சோதனைகள் வரும் போது அமைதியாக இருக்க வேண்டும் என்று உலகப் பிரகாரமான தத்துவ ஞானிகள் ஆலோசனைகள் சொல்லுகிறார்கள், ஆனால் இந்த நிரூபத்தை எழுதிய யாக்கோபோ “நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” என்று தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு ஆலோசனை கொடுக்கின்றார். அல்லேலூயா !  ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் வாழ்க்கையில் சோதிக்கப்படும் போது, ஏன் எனக்கு மட்டும் வாழ்க்கையில் இந்த சோதனை என்று சலித்து சோர்ந்து போய் கர்த்தரை பற்றும் விசுவாசத்திலிருந்து விலகிப் போய் விடாமல், உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொற

God who turned your mourning into joy (UK Lockdown - Day 92)

You have turned my mourning into dancing for me; You have taken off my sackcloth and clothed me with joy (Ps 30:11)

புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப் பண்ணும் தேவன் (UK Lockdown - Day 92)

என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமைதியாய் இராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் என்னை இடைகட்டினீர் (சங் 30:11) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீதுக்கு வாழ்க்கையில் நெருக்கங்களும், பாடுகளும் அதிகரித்துக் கொண்டே போனது, அவரால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு பாடுகள், அந்நாட்களில் அவர் கர்த்தருடைய சமூகத்தில் இரட்டுடுத்திக் கொண்டு துக்க முகத்தோடு கர்த்தரை தேடினார், கர்த்தர் அவருடைய கூப்பிடுதலின் சத்தத்தைக் கேட்டு, தாவீதின் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாற்றினார், மற்றும் அவருடைய இரட்டைட் களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் இடைக் கட்டினார். அல்லேலூயா !  பிரியமானவர்களே, அதனால் தான் தாவீது பாடுகிறார் “என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமைதியாய் இராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்ச

The Secret of David’s success (UK Lockdown - Day 91)

But I am like a green olive tree in the house of God,I trust in the mercy of God forever and ever (Ps 52:8)

தாவீதின் வெற்றியின் இரகசியம் (UK Lockdown - Day 91)

நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன் (சங் 52 : 8) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள 52 வது சங்கீதத்தை தாவீது எழுதியிருக்கிறார், இந்த வேத வசனத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க விருப்புகின்றேன், அவர் சொல்லுகிறார், 1) நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன் 2) தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்  பிரியமானவர்களே, தாவீதை போல் நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போல் இருக்க வேண்டும், இங்கே “ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போல் ” என்பது ஒருவன் தேவனுடைய ஆலயத்தில் வேரூன்றி நிட்பதை அல்லது தேவனில் நிலைத்திருப்பதைக் குறிக்கின்றது, அவ்வாறு தேவனுடைய ஆலயத்தில் ஒலிவ மரத்தைப் போல் இருப்போமானால் நம்முடைய வாழ்க்கை தாவீதை போல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக  இருக்கு

The Love of the Heavenly Father (UK Lockdown - Day 90)

Luke 15:11-24

பரலோக தகப்பனுடைய அன்பு (UK Lockdown - Day 90)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு இனிய தந்தையார் தின வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, இன்றைய தினத்தில் பரலோக தகப்பனுடைய அன்பு எப்படிப்பட்ட்து என்பதை வேத புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற ஒரு உவமையின் மூலமாக உங்களுக்கு கூற விரும்புகின்றேன்.  ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் ஒருநாள் தன்னுடைய தகப்பனிடம் ஆஸ்தியில்  அவனுக்கு வரும் பங்கை தரும் படி கேட்க்கிறான். தகப்பனும் ஆஸ்தியைப் பங்கிட்டு அவனுக்கு கொடுத்தார், சில நாளைக்குப்பின்பு அவன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப் போனான், அங்கே அவன் துன்மார்க்கமாய் வாழ்ந்து அவனுடைய  ஆஸ்தியை எல்லாம் அழித்துப் போடுகிறான், இந்த காலத்தில் அந்த தேசத்திலே கொடியபஞ்சம் வந்தது, அப்போது அவன் அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் வேலைக்கு சேருகிறான். அவன் இவனை தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்புகிறான். அப்பொழுது அவன் பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஆனால் ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. அப்போது அவன்

Believe in the Lord (UK Lockdown - Day 89)

Let not your heart faint, and be not fearful at the report heard in the land, when a report comes in one year and afterward a report in another year (Jer 51:46)

கர்த்தரை விசுவாசியுங்கள் (UK Lockdown - Day 89)

உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள்; ஒரு வருஷத்திலே ஒரு செய்தி கேட்கப்பட்டு, பின்பு மறுவருஷத்திலே வேறு செய்தி கேட்கப்படும் (எரேமி 51:46) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, யூதா ஜனங்கள் பாபிலோனியரினால் நெருக்கப்பட்ட போது கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசி மூலமாய் “ உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள்; ஒரு வருஷத்திலே ஒரு செய்தி கேட்கப்பட்டு, பின்பு மறுவருஷத்திலே வேறு செய்தி கேட்கப்படும்" என்று அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கிறார். அல்லேலூயா !  பிரியமானவர்களே, அன்று யூதா ஜனங்களுக்கு ஆலோசனை கொடுத்த கர்த்தர் இன்று இந்த பூலோகத்தில் வாழும் நம் ஒவ்வொருவரையும்  பார்த்து,  தேசங்களில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் பயங்கரமான காரியங்களை பார்ப்பதினாலும்,செய்திகளில் கேள்விப்படுவதினாலும் உங்களுடைய இருதயம் துவளாம

The blessings of the Lord (UK Lockdown - Day 88)

Then you shall delight yourself in the Lord; And I will cause you to ride on the high hills of the earth, And feed you with the heritage of Jacob your father. The mouth of the Lord has spoken (Isa 58:14)

கர்த்தருடைய ஆசிர்வாதம் (UK Lockdown - Day 88)

கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிபண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று (ஏசா 58:14) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் தன்னுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரையும் இந்த பூலோகத்தில் தன்னுடைய உன்னத ஆசிர்வாதத்தினால் ஆசிர்வதிக்க விரும்புகிறார். அவர் சொல்லுகிறார் “கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிபண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்" என்று. அல்லேலூயா !  பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வசனத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க விரும்புகின்றேன்,  1. கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய் 2. பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படிபண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன் பிரியமானவர்களே, “

Trust God a hundred percent in your life (UK Lockdown - Day 87)

Therefore the Lord heard this and was furious; So a fire was kindled against Jacob, And anger also came up against Israel, Because they did not believe in God, And did not trust in His salvation (Ps 78:21-22)

தேவனை நூறு சத வீதம் வாழ்க்கையில் நம்புங்கள் (UK Lockdown - Day 87)

ஆகையால் கர்த்தர் அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால் (சங் 78 : 21) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய அவிசுவாசமான நடத்தையினால் தேவனைக் கோபப்படுத்தினார்கள், அவர்கள் தேவனுடைய கிரியைகளைக் குறித்து நம்பவில்லை, தேவன் அவர்களை எதிரிகளிடமிருந்து இரட்சிப்பார் (பாதுகாப்பார்) தங்களுடைய எதிரான சூழ்நிலைகளை மாற்றி போடுவார் என்பதை அவர்கள் விசுவாசிக்கவில்லை.  பிரியமானவர்களே, நாங்களும் இஸ்ரவேல் ஜனங்கள் போல் தேவனை கோபப்படுத்தாமல் , அவரை நூறு சதவீதம் வாழ்க்கையில் நம்ப வேண்டும், வேதம் சொல்லுகிறது “ விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்” (ஏபி 11:6)  பிரியமானவர்களே, தேவனை நம்புங்கள்,

The Power of the Lord (UK Lockdown - Day 86)

That they may know that this is Your hand, That You, Lord, have done it (Ps 109:27)

கர்த்தருடைய வல்லமை (UK Lockdown - Day 86)

இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக (சங் 109: 27) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது எந்த சூழ்நிலையில்  இந்த சங்கீதத்தை எழுதினார் என்று தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் எதோ ஒரு பிரச்சனையில் இருக்கும் போது இந்த சங்கீதத்தை எழுதியிருக்கிறார் என்பது அதிக நிச்சயம். பிரியமானவர்களே, என்ன ஒரு அழகான ஜெபம் அவர் சொல்லுகிறார் “இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக“ என்று ஜெபிக்கிறார். அல்லேலூயா !  பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பாடுகளுக்கூடாய் கடந்து  செல்லும் போது ஏறெடுக்க வேண்டிய ஜெபம் இது. அல்லேலூயா! ஆம் பிரியமானவர்களே, தாவீது நெருக்கத்தில் இருந்த போது அவர் கர்த்தரை நோக்கி இந்த ஜெபத்தை ஏறெடுத்தார், கர்த்தரும் அவருடைய ஜெபத்தைக் கேட்டு அவருக்கு பதில் கொடுத்தார், அப்போது  த

Who are blessed? UK Lockdown - Day 85

Blessed is the man whose strength is in you,in whose heart are the ways of them (Ps 84:5)

யார் பாக்கியவான்கள் ? (UK Lockdown - Day 85)

உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள் (சங் 84:5) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது ராஜா தான் வாழ்க்கையில் எதிரிகளினால் நெருக்கப்படட போது அவர் இந்த 84 வது சங்கீதத்தைப் பாடியிருக்கிறார். அவர் சொல்லுகிறார் “உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்“ என்று. அல்லேலூயா !  ஆம் பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தின் படி கர்த்தரிடத்தில் பெலன்கொள்ளுகிற மனுஷர்களும், தங்கள் இருதயங்களில் கர்த்தருடைய வழிகளைக் கொண்டிருக்கிற மனுஷர்களும் பாக்கியங்கள் என்று வேதம் சொல்லுகின்றது, அல்லேலூயா ! பிரியமானவர்களே, தாவீது ராஜா தன்னுடைய மாமிச பெலத்தில், தன்னுடைய திறமையில் சார்ந்திராமல் கர்த்தரையே தன்னுடைய எல்லாச் சூழ்நிலைகளிலும் சார்ந்து வாழ்ந்தார், அவருக்கு வாழ்க்கையில் கர்த்
Couldn’t write the word of God today due to some unavoidable reasons. Sorry for the inconvenience. Thank you. 😢
தவிர்க்க முடியாத சில காரணங்களினால்  இன்றைய தின மன்னாவை எழுத முடியவில்லை, சிரமத்துக்கு மன்னிக்கவும் 😢
Couldn’t write the word of God today due to some unavoidable reasons. Sorry for the inconvenience. Thank you. 😢
தவிர்க்க முடியாத சில காரணங்களினால்  இன்றைய தின மன்னாவை எழுத முடியவில்லை, சிரமத்துக்கு மன்னிக்கவும் 😢
Couldn’t write the word of God today due to some unavoidable reasons. Sorry for the inconvenience. Thank you. 😢
தவிர்க்க முடியாத சில காரணங்களினால்  இன்றைய தின மன்னாவை எழுத முடியவில்லை, சிரமத்துக்கு மன்னிக்கவும் 😢
Couldn’t write the word of God today due to some unavoidable reasons. Sorry for the inconvenience. Thank you. 😢
தவிர்க்க முடியாத சில காரணங்களினால்  இன்றைய தின மன்னாவை எழுத முடியவில்லை, சிரமத்துக்கு மன்னிக்கவும் 😢

Give us help from trouble: for vain is the help of man (UK Lockdown - Day 80)

Give us help from trouble: for vain is the help of man (Ps 108:12)

இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா (UK Lockdown - Day 80)

(கர்த்தாவே) இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா (சங் 108:12) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது ஆடு மேய்க்கும் சிறுவனாக இருந்த போது கர்த்தர் மீது அவர் வைத்திருந்த விசுவாசத்தினாலே பெலிஸ்தியனான கோலியாத்தை யுத்தத்தில் ஜெயித்தார்.  இப்போது இந்த 108 வது சங்கீதத்தை தாவீது கர்த்தரை நோக்கிப் பாடும் போது, அவர் ஆடு மேய்க்கும் சிறுவனாக அல்ல இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாக சிங்காசனத்தில் இருந்தார், அவருக்கு இப்போது உதவியாக (தேசத்தை எதிரிகளிடமிருந்து காக்க) அநேக யுத்த சேனைகள் இருந்தார்கள், ஆனால் தாவீது தனக்கு இருந்த தன்னுடைய யுத்த சேனையில் விசுவாசத்தை வைக்காமல் கர்த்தரிடத்தில் விசுவாசத்தோடு “இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா” என்று பய பக்தியோடு ஜெபித்தார். அல்லேலூயா !  ஆம் பிரியமானவர்களே, தாவீது ராஜா நன்கு அறிந்திருந்தார் கர்த்தருடைய உதவியில்லாமல் தன்னுடைய யுத்த சே

Unless the Lord guards the city, The watchman keeps awake in vain (UK Lockdown - Day 79)

Unless the Lord guards the city, The watchman stays awake in vain (Ps 127:2)

கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா (UK Lockdown - Day 79)

கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா (சங் 127:2) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, சாலமோன் இஸ்ரவேலை ஆட்சி செய்த நாட்களில், தேசத்தை எதிராளிகளிடமிருந்து பாத்துகாத்துக் கொள்ள அவர் “விழித்திருந்து காவல் காக்கும் காவலாளிகளை” தேசத்தில் நியமித்திருந்தார்.  ஆனால் இங்கே அவர் சொல்லுகிறார் “கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா” என்று. அல்லேலூயா!  பிரியமானவர்களே, சாலமோன் நன்கு அறிந்திருந்தார் தேசத்தை பாதுகாக்க  “விழித்திருந்து காவல் காக்கும் காவலாளிகள்” நியமிக்கப்பட்டிருந்தாலும் கர்த்தருடைய உதவியில்லாமல் எந்த காவலாளராலும் தன்னுடைய தேசத்தை காவல் காக்க முடியாதென்றும், கர்த்தரே தன்னுடைய தேசத்துக்கு காவலாளியாக இருக்கிறார் என்றும் அவர் விசுவாசித்தார். அல்லேலூயா !  பிரியமானவர்களே, இன்றைக்கு நாம் வாழுகிற தேசத்திலும் தேசத்தை “பாதுகாக்கும் படையினர்” நிய

Unless the Lord builds the house, those who build it labor in vain (UK Lockdown - Day 78)

Unless the Lord builds the house, They labor in vain who build it (Ps 127:1)

கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா (UK Lockdown - Day 78)

கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா (சங் 127:1)  ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, இன்று நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குடும்பங்கள் நல்லாய் இருபதட்க்காக, நம்முடைய குடும்பங்கள் செழிப்பாய் இருப்பதட்க்காக அதிகாலையில் எழுந்து குடும்பங்களுக்காக கடினமாக உழைக்கின்றோம், ஆனால் எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் கர்த்தருடைய உதவியில்லையென்றால், கர்த்தர் ஆசிர்வதிக்கவில்லையென்றால் நம்முடைய பிரயாசமெல்லாம் விருதாய் போய் விடும்.  அதைத்தான் வேத வசனம் தெளிவாய் நமக்கு இங்கே கூறுகின்றது “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா” என்று. அல்லேலூயா !  பிரியமானவர்களே, குடும்பத்தில் தலைவராக, தலைவிகளாக இருக்கின்ற நீங்கள் கர்த்தரை உங்களுடைய குடும்பத்தில் முன்பாக வைத்து, அவரை கனப்படுத்தி, அவருடைய உதவியுடன், அவருடைய ஆலோசனையின் படி உங்களுடைய க

In the shadow of Your wings I will make my refuge (UK Lockdown - Day 77)

And in the shadow of Your wings I will make my refuge, Until these calamities have passed by (Ps 57:1 b)

விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன் (UK Lockdown - Day 77)

விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன் (சங் 57:1 b) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது இந்த சங்கீதத்தை சவுலுக்கும், அவருடைய மனிதர்களுக்கும் பயந்து எருசலேமை விட்டு ஓடி கெபியிலே ஒளிந்து இருக்கும் போது பாடியிருக்கிறார். அவர் கெபியிலே இருந்ததினால் தான் பாதுகாப்பாக இருக்கிறேன், எதிரிகளினால் தன்னை பிடிக்க முடியாது என்று நினைக்கவில்லை, அவர் கெபியிலே ஒளிந்து இருந்தாலும் அவருக்கு தெரியும் கர்த்தரினால் மாத்திரம் தான் தன்னை எதிரிகளிடமிருந்து பாதுக்காக்க முடியும் என்று விசுவாசித்தார். அதனால் தான் அவர் தான் எதிரிகளினால் நெருக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த போது அவர் சொன்னார் “விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்” என்று. அல்லேலூயா !  பிரியமானவர்களே, தாவீது அன்று ஆபத்துக்கு பயந்து கெபிக்குள்ளே இருந்தது போல் இன்று ந

There is no want to those who fear God (UK Lockdown - Day 76)

O [reverently] fear the  Lord , you His saints (believers, holy ones);  For to those who fear Him there is no want (Ps 34:9)

கர்த்தருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை (UK Lockdown - Day 76)

கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை (சங் 34:9) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது “கர்த்தருக்குப் பயந்திருங்கள், அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை” என்று.  பிரியமானவர்களே இங்கே “கர்த்தருக்குப் பயந்திருங்கள்” என்பதுக்கு “கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்திருங்கள்” என்று அர்த்தம்.  ஆம் பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிற பிரகாரம் நாம் நம்முடைய வாழ்க்கையில் எல்லாப் பகுதிகளிலும் கர்த்தருக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவரை நம்முடைய வாழ்க்கையில் கனப்படுத்தும் போது கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் எந்த நன்மையும் குறைவு படாத வண்ணம் நடத்தி செல்ல அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !  கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

He who despises the word will be destroyed, But he who fears will be rewarded (UK Lockdown - Day 75)

Whoever despises the word and counsel [of God] brings destruction upon himself,But he who [reverently] fears and respects the commandment [of God] will be rewarded (Pro 13:13)

திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான் பயப்படுகிறவனோ பலனடைவான் (UK Lockdown - Day 75)

திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான் (நீதி 13:13) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க விரும்புகின்றேன்,  1 ) திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான் 2 ) கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான் 1 ) திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான் :  பிரியமானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாகிய நம்மை இந்த பிரபஞ்சமும், இந்த பிரபஞ்சத்தின் காரியங்களும் ஆளுகை செய்யக் கூடாது, வேதம் சொல்லுகிறது “திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்” என்று.  ஆகவே பிரியமானவர்களே, நாம் இந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்தாலும், நாம் இந்த பிரபஞ்சத்துக்குரியவர்களல்ல, நாம் தேவனுடைய பிள்ளைகள், பரலோகத்துக்குரியவர்கள் என்பதை மனதில் வைத்து நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் திருவசனத்துக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் . அல்லேலூயா !  2 ) கற்பனைக்குப்

I delight to do Your will, and Your law is within my heart (UK Lockdown - Day 74)

I delight to do Your will, O my God, And Your law is within my heart (Ps 40:8)

உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன், உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது (UK Lockdown - Day 74)

என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன், உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். (சங் 40:8) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது தேவனையும், அவருடைய நியாயப் பிரமானத்தையும் மெய்யாகவே அன்பு கூர்ந்திருந்தார், அதனால்தான் தேவனையே “ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான்” என்று அவனைக்குறித்துச் சாட்சியும் கொடுத்தார். அல்லேலூயா !  பிரியமானவர்களே, தாவீது அவருடைய வாழ்க்கையில் தேவனுக்கு பிரியமானவற்றை மாத்திரமே செய்து, தேவனை பிரியப்படுத்தி தேவன் அவருடைய வாழ்க்கையில் அவரைக் குறித்து வைத்திருந்த சித்தத்தை நிறைவேற்றினது போல் நாமும் நம்முடைய வாழ்க்கையில் தேவனையும், அவருடைய வார்த்தையையும் நேசித்து தேவனுக்கு பிரியமானவற்றை மாத்திரமே வாழ்க்கையில் செய்து தேவன் எங்களைக் குறித்து எங்களுடைய வ

But by You only we make mention of Your name (UK Lockdown - Day 73)

O Lord our God, other lords besides you have ruled over us, But by You only we make mention of Your name (Is 26:13)

கர்த்தாவே, உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவேன் (UK Lockdown - Day 73)

Image
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம் (ஏசா 26:13) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தரை விட்டு விலகி அந்நிய தேவர்களை சேவித்து தேவனுக்கு விரோதமாக பாவம் செய்த இஸ்ரவேல் ஜனங்கள் இப்பொழுது அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக தாங்கள் செய்த பாவங்களுக்காக கர்த்தரிடம் “எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம்” என்று பாவ அறிக்கை செய்தார்கள். அல்லேலூயா !  பிரியமானவர்களே, நாமும் நம்முடைய இருதயத்தை கர்த்தருடைய சமூகத்தில் ஆராய்ந்து பார்த்து நம்முடைய இருதயமும் கர்த்தரை விட்டு தூர விலகியிருக்குமானால் “இனி உம்மை மாத்திரமே சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவேன்” என்று ஒரு தீர

I will mention the lovingkindnesses of the Lord And the praises of the Lord (UK Lockdown - Day 72)

I will mention the lovingkindnesses of the Lord and the praises of the Lord, According to all that the Lord has bestowed on us, And the great goodness toward the house of Israel, Which He has bestowed on them according to His mercies, According to the multitude of His lovingkindnesses (Is 63:7)

கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுவேன் (UK Lockdown - Day 72)

கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுவேன் (ஏசா 63:7) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய தீர்க்கதரிசி ஏசாயா கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கும், தனக்கும் செய்த எல்லா நன்மைகளுக்காக தான்  கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம் பண்ணுவதாக கூறுகிறார். அல்லேலூயா !  ஆம் பிரியமானவர்களே, கர்த்தர் நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும், நம்முடைய குடும்ப வாழ்விலும் ஏராளமான நன்மைகளை செய்திருக்கிறார். அவ்வாறு கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்திருக்கிற ஒவ்வொரு நன்மைகளையும் ஆராய்ந்து பார்ப்போமானால்  நாம் அவற்றை கர்த்தரிடமிருந்து பெற்றுக் கொள்ளுவதட்க்கு எந்த வ

But I have trusted in Your mercy (UK Lockdown - Day 71)

But I have trusted in Your mercy (Ps 13:5)

உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன் (UK Lockdown - Day 71)

Image
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன் (சங் 13:5) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது வாழ்க்கையில் பாடுகளுக்கூடாகவும், துன்பங்களுக்கூடாகவும், உபத்திரவங்களுக்கூடாகவும் கடந்து சென்ற போது அவர் கர்த்தருடைய கிருபையின் மீதே நம்பிக்கை வைத்திருந்தார். அதனால் தான் அவர் சொல்லுகிறார் “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்” என்று. அல்லேலூயா !  ஆம் பிரியமானவர்களே, கர்த்தருடைய கிருபையும், இரக்கங்களுமே எங்களை இந்த பூலோகத்தில் வாழ வைக்கின்றது, அவருடைய கிருபையும், இரக்கங்களுமே எங்களை இந்நாள் வரை கொரோனா கொள்ளை கிருமி, மற்றும் ஒவ்வொரு தீங்குக்கும் விலக்கி பாதுகாத்து இருக்கின்றது. அல்லேலூயா !  பிரியமானவர்களே  “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” என்று புலம்பல் 3:22 இல் வாசிக்கின்றோம். அல்லேலூயா !  ஆகவே பிரியமானவ

Father Jesus millions thanks to you (UK Lockdown - Day 70)

Oh, give thanks to the Lord, for He is good! for His mercy endures forever (1 Chr 16:34)

இயேசு அப்பா உமக்கு கோடான கோடி நன்றி (UK Lockdown - Day 70)

Image
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது (1 நாளா 16:34) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தர் இயேசு கிறிஸ்து நல்லவர், இந்த நாளிலும் நாங்கள் உயிரோடு இருப்பது கர்த்தருடைய கிருபையும், அவருடைய இரக்கங்களுமே. அல்லேலூயா ! இந்த 2020 ம் ஆண்டில் அவர் எங்களை ஐந்து மாதங்கள் கொரோனா தொற்று நோய்க்கும், மற்றும் எல்லா விதமான ஆபத்துக்களுக்கும் விலக்கி பாதுகாத்து வந்திருக்கிறார், நம்முடைய குடும்ப தேவைகளை அதினத்தின் நாட்களில் சந்தித்து வந்திருக்கிறார். அல்லேலூயா ! ஆகவே பிரியமானவர்களே, கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையில் செய்த நன்மைக்காக கர்த்தருக்கு ஒவ்வொரு நாளும் தவறாமல் நன்றி செலுத்தி அவரை துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. அல்லேலூயா ! கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.