Posts

Showing posts from July, 2020

கர்த்தருடைய ஆவினாலே எல்லாம் ஆகும்

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (சக 4:6) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, செருபாபேல் தலைமையில் பாபிலோன் சிறையியிருப்பில் இருந்து திரும்பி வந்த ஜனங்கள் அவருடைய தலைமையில் தேவனுடைய ஆலயத்தை கட்ட  ஆரம்பித்தார்கள் அப்போது அவர்களுக்கு ஆலயத்தைக் கட்டுமான வேலைகளுக்கு தடைகளும், எதிருப்புக்களும் வந்தது, அப்போது செருபாபேல் சோர்ந்து போய் விடுகிறார், எங்கோ தங்களால் ஆலயத்தைக்  கட்டி முடிக்காமல் போய் விடுமோ என்கிறதான சந்தேகமும், பயமும் அவருக்கு வந்தது, அவர் கர்த்தரையும், அவருடைய வல்லமையையும் மறந்து போய் விடுகிறார், இந்த சூழ்நிலையில் தான் கர்த்தர் சொல்லுகிறார் “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று கூறி அவரை உட்ச்சாகப்படுத்துகிறார். அல்லேலூயா !  ஆம் பிரியமானவர்களே, கர்த்தருடைய ஊழியத்தை செய்கிற உங்களு

இடறல்களை வழியிலிருந்து எடுத்துப் போடும் தேவன் (UK eased more lockdown restrictions - Day 123)

வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, இடறல்களை என் ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும் (ஏசா 57:14 ) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, இந்த பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் பாடுகளும், உபத்திரவங்களும் நிச்சயம் உண்டு, ஆனால் பிரியமானவர்களே, நல்ல செய்தி என்னெவென்றால் நம்மை சிருஷ்டித்தவரும், நம்முடைய ஆண்டவரும், நம்முடைய இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்து அவரை நம்புகிற அவருடைய பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலிலும், நம்முடைய வழிகளிலும் நாம் சமாதானமாகவும், ஆறுதலாகவும் இந்த பூலோகத்தில் ஜீவிப்பதுக்கு தடையாக இருக்கும் ஒவ்வொரு தடைகளையும், ஒவ்வொரு இடறல்களையும் நீக்கிப் போட்டு, அவர் தம்முடைய கிருபையினால் நம் ஒவ்வொருவருவருடைய வாழ்க்கையிலும் இருக்கும் நம்முடைய தேவைகள் எல்லாவற்றையும் அதினதின் நாட்களில் சந்தித்து அவர் நம் ஒவ்வொருவரையும் இந

The Lord is fighting for you (UK eased more lockdown restrictions - Day 122)

For the LORD your God is He who is fighting for you, just as He promised you.

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுகிறார் (UK eased more lockdown restrictions - Day 122)

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார் (யோசு 23:10) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, உங்களுக்கு விரோதமாக இருக்கும் உங்களுடைய சூழ்நிலையைப் பார்த்து பயப்படுகிறீர்களா? பயப்பட வேண்டாம் கர்த்தரை நம்புங்கள், அவர் மீது உங்களுடைய விசுவாசத்தை வையுங்கள், அவர் தாமே  உங்களுக்காக யுத்தம் பண்ணி காரியத்தை வாய்க்கப் பண்ணுகிறவர். அல்லேலூயா ! பிரியமானவர்களே, அன்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு தாம் சொல்லியிருந்த வார்த்தையில் கர்த்தர் உண்மையுள்ளவராக இருந்து, அவர்களுடைய எதிரிகளோடு அவர் யுத்தம் பண்ணி அவர்களுக்கு வாழ்க்கையில் ஜெயத்தைக் கொடுத்த கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கும் தான் சொன்ன வார்த்தையில் உண்மையுள்ளவராக இருந்து, உங்களுக்காக உங்களுடைய எதிரிகளோடு வாழ்க்கையில் யுத்தத்தை புரிந்து ஜெயத்தைக் கொடுக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! என்ன யுத்தம் என்று நினைக்கிறீங்கள

God is so faithful to his words (UK eased more lockdown restrictions - Day 121)

And now, O Lord God, You are God, and Your words are true, and You have promised this goodness to Your servant (2  Sa 7:28)

தேவன் தமது வார்த்தையில் உண்மையுள்ளவராக இருக்கிறார் (UK eased more lockdown restrictions - Day 121)

இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவரீர் உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம்பண்ணினீர் (2 சாமூ 7:28) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவன் தம்முடைய  வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராக இருக்கிறார், அவர் எதை உங்களுக்கு வாழ்க்கையில் செய்வேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறாரோ அதை அவர் உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேற்றவும் உண்மையுள்ளவராக இருக்கிறார், வாக்கு மறக்க அவர் மனுபுத்திரனல்ல (எண்ணா 23:19). அல்லேலூயா !  ஆகவே பிரியமானவர்களே, உங்களுடைய சூழ்நிலையை பார்த்து இது என்னுடைய வாழ்க்கையில் எங்கே நடக்கப் போகிறது, சாத்தியமே இல்லை என்று நினைத்து சர்வவல்லவரை உங்களுடைய வாழ்க்கையில் மட்டுப்படுத்தி விட வேண்டாம், வேதம் சொல்லுகிறது மனுஷனால் முடியாதது தேவனானால் கூடும் என்று (லூக் 18:27). அல்லேலூயா !  பிரியமானவர்களே, ஆபிரகாம், யாக்கோப்பு, தாவீது மற்றும் வேதத்தில்

(UK eased more lockdown restrictions - Day 120)

Couldn’t write the word of God today due to some unavoidable reasons. Sorry for the inconvenience. Thank you. 😢

(UK eased more lockdown restrictions - Day 120)

தவிர்க்க முடியாத சில காரணங்களினால்  இன்றைய தின மன்னாவை எழுத முடியவில்லை, சிரமத்துக்கு மன்னிக்கவும் 😢

(UK eased more lockdown restrictions - Day 119)

Couldn’t write the word of God today due to some unavoidable reasons. Sorry for the inconvenience. Thank you. 😢

(UK eased more lockdown restrictions - Day 119)

தவிர்க்க முடியாத சில காரணங்களினால்  இன்றைய தின மன்னாவை எழுத முடியவில்லை, சிரமத்துக்கு மன்னிக்கவும் 😢

(UK eased more lockdown restrictions - Day 118)

Couldn’t write the word of God today due to some unavoidable reasons. Sorry for the inconvenience. Thank you. 😢

(UK eased more lockdown restrictions - Day 118)

தவிர்க்க முடியாத சில காரணங்களினால்  இன்றைய தின மன்னாவை எழுத முடியவில்லை, சிரமத்துக்கு மன்னிக்கவும் 😢

Who am I, Lord God? And what is my house (UK eased more lockdown restrictions - Day 117)

Then King David went in and sat before the Lord; and he said: “Who am I, O Lord God? And what is my house, that You have brought me this far? (2 Sam 7:18)

நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? (UK eased more lockdown restrictions - Day 117)

அப்பொழுது தாவீது ராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? (2 சாமூ 7:18) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது  ராஜா   கர்த்தருடைய சமூகத்தில் தன்னுடைய விண்ணப்பத்தையும், வேண்டுதல்களையும் ஏறெடுப்பதுக்கு முன்பாக அவர் தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும் கர்த்தருடைய சமூகத்தில் “கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?” என்று தாழ்த்துகிறார். அல்லேலூயா !  பிரியமானவர்களே, தாவீது தேவ சமூகத்தில் ஏறெடுத்த இந்த வார்த்தைகள் மூலமாய் அவர் எப்படிப்பட்ட   குணாதிசயங்களை உடையவராக இருந்தார் என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது,  1) தேவன் மீது பிரியமுள்ளவராக இருந்திருக்கிறார்  2 ) மனத் தாழ்மை உள்ளவராக  இருந்திருக்கிறார்  3)

Believe in your heart and confess with your mouth that Jesus Christ is Lord (UK eased more lockdown restrictions - Day 116)

that if you confess with your mouth the Lord Jesus and believe in your heart that God has raised Him from the dead, you will be saved (Rom 10:9)

இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்று இருதயத்தில் விசுவாசித்து, வாயினால் அறிக்கை செய்யுங்கள் (UK eased more lockdown restrictions - Day 116)

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய் (ரோம 10:9) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டுமானால் நீங்கள் “இரண்டு” காரியங்களை செய்ய வேண்டுமென்று உங்களுக்கு வேதம் ஆலோசனை கூறுகின்றது,  1) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட வேண்டும் 2) தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசிக்க வேண்டும்   1) கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட வேண்டும் :  பிரியமானவர்களே, நீங்கள் இயேசு கிறிஸ்துவே உங்களுடைய இரட்சகர், ஆண்டவர் என்றும், அவரை நீங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் சேவிப்பீர்கள் என்றும் உங்களுடைய வாயினால் அறிக்கை பண்ண வேண்டும். அல்லேலூயா !  2) தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசிக்க வேண்டும்  

The Lord lives (UK eased more lockdown restrictions - Day 115)

The Lord lives! Blessed be my Rock! Let the God of my salvation be exalted (Ps 18:46)

கர்த்தர் ஜீவனுள்ளவர் (UK eased more lockdown restrictions - Day 115)

கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக (சங் 18:46) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது தன்னுடைய   வாழ்க்கையில் கர்த்தருடைய பாதுகாப்பையும், பராமரிப்பையும், இரட்சிப்பையும் அதிகமாய் ருசித்துப் பார்த்திருந்ததினால் அவர் கர்த்தரை தன்னுடைய வாழ்க்கையில் நன்றியோடு துதித்து, ஆராதித்து கனப்படுத்தி, மகிமைபடுத்தினார். அல்லேலூயா !  பிரியமானவர்களே, புற ஜாதியின் தேவர்கள் “விக்கிரங்கள்”, அவைகள் மனிதனுடைய கை வேலைகள், அவைகள் மரித்த நிலைமையில் உள்ளன, அவைகளுக்கு  காதுகள் இருந்தும் கேட்க்காது, அவைகளுக்கு கண்கள் இருந்தாலும் அவைகளால் பார்க்க முடியாது, அவைகளுக்கு வாய் இருந்தும் அவைகளால் பேச முடியாது, அவைகளுக்கு கைகள் இருந்தாலும் அவைகளால் தூக்கவும் முடியாது, அவைகளுக்கு கால்கள் இருந்தாலும் அவைகளால் நடக்கவும் முடியாது, அவைகள் மனிதனுடைய கட்பனைகளினால் செதுக்

What’s the meaning of Faith (UK eased more lockdown restrictions - Day 114)

Now faith is the substance of things hoped for, the evidence of things not seen (Heb 11:1) 

விசுவாசமென்றால்“ என்ன? (UK eased more lockdown restrictions - Day 114)

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபிரே 11:1) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, “விசுவாசமென்றால்“ என்ன?  பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வசனத்தில் “விசுவாசத்துக்கு”  இரண்டு விதமான விளக்கங்கள் தேவ ஆவியானவர் கொடுத்திருக்கிறார்,  1) “நம்பப்படுகிறவைகளின் உறுதி“ 2) விசுவாசமானது “ காணப்படாதவைகளின் நிச்சயம்” 1) விசுவாசமானது “நம்பப்படுகிறவைகளின் உறுதி“  பிரியமானவர்களே, விசுவாசத்தைக் குறிப்பிடும்'பிஸ்டிஸ்' (pistis)என்னும் கிரேக்கப்பதம், “அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை” என்று அர்த்தம் கொடுப்பதாகவுள்ளது. இன்னொரு முறையில் சொல்வதென்றால் “ஆதாரமே இல்லாமல் இருந்தாலும் அதை உறுதியாக நம்புகிறது தான் விசுவாசம்”. பிரியமானவர்களே, வேத புஸ்தகத்தில் தேவன் நமக்கு அநேக வாக்குத்தத்தங்களை கொடுத்திருக்கிறார், தேவன் அவற்றை நமது வாழ்க்கையில் நிறைவேற்றுவார் என்று விசுவா

Don't give place to the devil in your life (UK eased more lockdown restrictions - Day 113)

So we see that they could not enter in because of unbelief (Heb 3:19)

வாழ்க்கையில் பிசாசுக்கு இடத்தை கொடுத்து விடாதீர்கள் (UK eased more lockdown restrictions - Day 113)

ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற் போனார்களென்று பார்க்கிறோம் (எபி 3:19) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, பிசாசானவன் தேவனுடைய பிள்ளைகளை தேவனிடமிருந்து பிரிக்க அவிசுவாசத்தை அவர்களுடைய இருதயத்தில் இந்நாட்களில் விதைத்து வருகிறான். ஆகவே தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் பிசாசுக்கு நம்முடைய இருதயத்தில் இடத்தை  கொடுத்து விடாது  மிகவும் விளிப்புள்ளவராகவும், ஜாக்கிரதையுள்ளவராகவும் இருக்க வேண்டும். அல்லேலூயா !  பிரியமானவர்களே, இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய வாழ்க்கையில்  தேவன் அவர்களுக்கு வாக்குப் பண்ணின தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசியாமல் பிசாசுக்கு தங்களுடைய இருதயத்தில் இடத்தை கொடுத்தினால் அவன் அவர்களுடைய இருதயத்தில் அவிசுவாசத்தை விதைத்ததன் நிமித்தம் அவர்களால் தேவன் அவர்களுக்கு கொடுப்பேன் என்று வாக்குப் பண்ணின பாலும், தேனும் ஓடுகின்றதான கானான் தேசத்துக்குள் பிரவேசிக்க முடியாமல

Blessed is that man who makes the Lord his trust (UK eased more lockdown restrictions - Day 112)

Blessed  is  that man who makes the  Lord  his trust,  And does not respect the proud, nor such as turn aside to lies (Ps 40:4)

கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான் (UK eased more lockdown restrictions - Day 112)

அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் 40:4 ) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, இந்த பூலோகத்தில் வாழும் ஜனங்களில் அநேகர் தங்களைக் குறித்து பெருமையாக பேசி அவர்களை நம்பும் படி கூறுவார்கள், ஆனால் இவர்கள் மாயமாலகாரர்கள், இவர்களுடைய வார்த்தைகளில் உண்மையிருக்காது, இவர்களை நம்பி நீங்கள் போவீர்களானால் உங்களை அவர்கள் பாதியிலே கை விட்டு விடுவார்கள்.  அதனால் தான் தாவீது இங்கே ‘அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்‘ என்று கர்த்தரை நம்பும் படி அவர் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு ஆலோசனை கூறுகிறார். அல்லேலூயா! பிரியமானவர்களே, தாவீது தமது எல்லாச் சூழ்நிலைகளிலும் கர்த்தரையே நம்பி அவரையே சார்ந்து வாழ்ந்தார், அதனால் அவர் வாழ்க்கையில் வெட்கப்பட்டு போக கர்த்தர்

(UK eased more lockdown restrictions - Day 111)

(UK eased more lockdown restrictions - Day 111)

My soul thirsts for God, for the living God (UK eased more lockdown restrictions - Day 110)

My soul thirsts for God, for the living God. When shall I come and appear before God? (Ps 42:2)

என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது (UK eased more lockdown restrictions - Day 110)

என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? (சங் 42:2) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, இந்த 42 வது சங்கீதத்தை யார் எழுதினார் என்று குறிப்பிடப்படவில்லை, ஆனால் தாவீது தன்னுடைய எதிரிகளாகிய சவுலினால் அல்லது தன்னுடைய புதல்வன் அப்சலோமினால் நெருக்கப்படட போது பாடியிருக்கலாம் என்று வேத பண்டிதர்கள் கூறுகிறார்கள்.  இந்த சங்கீத்தை பாடின போது அவர் எருசலேமில் இருக்கவில்லை, எதிரிகளுக்குப் பயந்து தன்னுடைய பிராரணை பாதுகாக்கும் படி குகைகளில் ஒளிந்து இருந்தார், அவரால் இப்போது முன்பு போல எருசலேமில் இருந்த தேவனுடைய ஆலயத்துக்கு சென்று அவரால் தேவனை ஆராதிக்க முடியவில்லை, ஆனால் அவருடைய இருதயம் எப்போதும் கர்த்தரோடு இணைந்து இசைந்திருந்தது, அவருடைய சிந்தனையெல்லாம் ஜீவனுள்ள தேவன் மீதும், அவருடைய ஆலயத்தின் மீதுமே இருந்தது, அதனால் தான் அவர் “என் ஆத்துமா தேவன்ம

We're thinking of your lovingkindness (UK eased more lockdown restrictions - Day 109)

We have thought, O God, on Your lovingkindness, In the midst of Your temple (Ps 48:9)

உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் (UK eased more lockdown restrictions - Day 109)

தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம் (சங் 48:9) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, வேதம் சொல்லுகிறது, கர்த்தருடைய பிள்ளைகள் அவருடைய ஆலயத்தின் நடுவிலே அவருடைய கிருபையை சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று, அல்லேலூயா !  ஆம் பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய  நம் ஒவ்வொருவருடைய இருதயமானது எப்போதும் நம்மை சிருஷ்டித்த, நம்மை பாவத்திலிருந்து இரட்சித்த, நம்மை அனுதினம் வழி நடத்துகிற நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சிந்தனையினால் நிரப்பியிருக்க வேண்டும். மற்றும் நாம் தேவனுடைய ஆலயத்தின் நடுவிலே கூடி வரும் போது அவருடைய அன்பைக் குறித்து, அவருடைய கிருபையைக் குறித்து, அவருடைய இரக்கங்களைக் குறித்து சக விசுவாசிகளிடம் பகிர்ந்து கொள்ளுவதோடு, கர்த்தரை அறியாத பிள்ளைகளோடும் கர்த்தருடைய கிருபையை, அவருடைய அன்பை, அவருடைய மகத்துவங்களை குறித்துச் சொல்லி அவருடைய நாமத்

Don't fear nor be dismayed (UK eased more lockdown restrictions - Day 108)

And the Lord, He is the One who goes before you. He will be with you, He will not leave you nor forsake you; do not fear nor be dismayed (Deu 31:8)

நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் (UK eased more lockdown restrictions - Day 108)

கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் (உபா 31:8) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, சூழ்நிலை உங்களுக்கு விரோதமாக இருப்பதினால் என்னவாகும் என்று பயந்து கலங்கிப் போய் இருக்கிறீர்களா?  ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களை பார்த்து 6 காரியங்களை சொல்லுகிறார், 1) நான் உனக்கு முன்பாகப் போகிறேன்  2) நான் உன்னோடே இருக்கிறேன் 3) நான் உன்னை விட்டு விலகுவதில்லை  4) நான் உன்னை கை விடுவதில்லை  5) நீ பயப்பட வேண்டாம்  6) நீ கலங்க வேண்டாம் அல்லேலூயா !  பிரியமானவர்களே, தேவன் தனது வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவராக இருக்கிறார், தாயின் கருவில் உங்களை சிருஷ்ட்டித்து, உங்களை பாதுகாத்து, இந்த பூலோகத்துக்கு உங்களை கொண்டு வந்து, இந்நாள் வரை உங்களை அவர் எல்லா தீங்குக்கும் இந்த பூலோகத்தில் பாதுகாத்து வந்திருக்கிறார், அவர

The Lord has anointed me to preach good tidings to the poor (UK eased more lockdown restrictions - Day 107)

The Spirit of the Lord God is upon Me, Because the Lord has anointed Me To preach good tidings to the poor (Is 61:1)

கர்த்தர் தன்னுடைய சுவிஷேகத்தை ஜனங்களுக்கு அறிவிக்க என்னை அபிஷேகம் பண்ணியிருக்கிறார் (UK eased more lockdown restrictions - Day 107)

கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார் (ஏசா 61:1) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவரையும் கர்த்தர்  சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்க அபிஷேகம் பண்ணியிருக்கிறார், அல்லேலூயா ! பிரியமானவர்களே, மனுஷர்கள் தங்களுடைய ஆத்துமாவில் இரட்சிக்கப்படுவதே அவர்களுக்கு கிடைக்கும் மெய்யான விடுதலை. ஆனால், இந்த பூலோகத்தில் ஆத்துமாவில் விடுதலையில்லாமல் அநேக ஜனங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு தேவன் தம்முடைய சுவிஷேகத்தை அறிவிக்கும் படியே தேவன் நம் ஒவ்வொருவரையும் அவருக்காக தெரிந்தெடுத்து அபிஷேகம் பண்ணியிருக்கிறார், அல்லேலூயா !  பிரியமானவர்களே, கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் அபிஷேகம் பண்ணியிருப்பது மாத்திரமல்ல அவருடைய ஆவியானவரையும் நமக்கு கொடுத்திருக்கிறார், அவர் நம்மோடு இர
Couldn’t write the word of God today due to some unavoidable reasons. Sorry for the inconvenience. Thank you. 😢
தவிர்க்க முடியாத சில காரணங்களினால்  இன்றைய தின மன்னாவை எழுத முடியவில்லை, சிரமத்துக்கு மன்னிக்கவும் 😢
Couldn’t write the word of God today due to some unavoidable reasons. Sorry for the inconvenience. Thank you. 😢
தவிர்க்க முடியாத சில காரணங்களினால்  இன்றைய தின மன்னாவை எழுத முடியவில்லை, சிரமத்துக்கு மன்னிக்கவும் 😢

(UK eased more lockdown restrictions - Day 104)

There are many who say,“Who will show us any good?” (Ps 4:6)

எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார்? என்று சொல்லுகிறவர்கள் அநேகர் (UK eased more lockdown restrictions - Day 104)

எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார்? என்று சொல்லுகிறவர்கள் அநேகர் (சங் 4:6) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, இயேசுவை ஆண்டவராக ஏற்றுக் கொள்ளாத ஜனங்கள் (உலகப் பிரகாரமான ஜனங்கள்) இயேசுவை ஆண்டவராக ஏற்றுக் கொண்ட இயேசுவுடைய பிள்ளைகளை பார்த்து சொல்லுகிறார்கள் உங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார்? என்று.  பிரியமானவர்களே, ஐசுவரியம் மிகுதியாக இருந்தால் அதுவே அவர்களுக்கு பெரிய நன்மை (ஆசிர்வாதம்) என்று உலகப் பிரகாரமான ஜனங்கள் சிந்திக்கிறார்கள், அவர்கள் எதை  தங்களுடைய மாமிசக் கண்களால் பார்க்கிறார்களோ அதுவே அவர்களுக்கு நன்மையென்று சொல்லுகிறார்கள், ஆனால் இயேசுவுடைய பிள்ளைகளாகிய நாமோ கர்த்தர் நமக்கு நியமித்திருக்கிற நன்மைகளை நம்முடைய மாமிசக் கண்களினால் காண முடியாவிட்டாலும் அவற்றை கர்த்தருக்குள் நாம் வைத்திருக்கிற விசுவாசத்தினால் கண்டு கர்த்தருக்குள் மன மகிழ்ச்சியாக இருக்கிறோம். அல்லேலூயா !   பிரியமானவர்களே, நம்முடைய ம

The goodness and beauty of God (UK eased more lockdown restrictions - Day 103)

For how great is his goodness and how great his beauty! Grain shall make the young men thrive, And new wine the maids (Zech 9:17)

தேவனுடைய காருண்ணியமும், சௌந்தரியமும் (UK eased more lockdown restrictions - Day 103)

அவருடைய ( தேவனையுடைய)  காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? (சக 9:17) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவனுடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது?  பிரியமானவர்களே, தேவனுடைய காருண்ணியமும், சவுந்தரியமுமே இந்நாள் வரை நாம் ஒவ்வொருவரும் இந்த பூலோகத்தில் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், சமாதானமாகவும் வாழ காரணமாக இருக்கின்றது. அல்லேலூயா !  ஆகவே பிரியமானவர்களே, நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய சமூகத்தில் வந்து, அவர் நம் ஒவ்வொருவருடைய தேவைகளை அந்த அந்த நேரங்களில் சந்திப்பதட்க்காகவும், அவர் நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் பாதுகாப்புக்களுக்காகவும், ஜெயங்களுக்களுக்காகவும் அவரை ஆராதித்து, துதித்து நம்முடைய வாழ்க்கையில் மகிமைபடுத்த வேண்டும், அல்லேலூயா! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

The Hand of the Lord (UK Lockdown - Day 102)

Stretch out Your hand from above; Rescue me and deliver me out of great waters, From the hand of foreigners (Ps 144:7) Whose mouth speaks vain words, And whose right hand is a right hand of falsehood (Ps 144:8)

கர்த்தருடைய கரம் (UK Lockdown - Day 102)

உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும் (சங் 144:7) மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும் (சங் 144:8) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது நெருக்கத்திலிருந்த போது தேவனுடைய சமூகத்தில் அவர் இரண்டு காரியங்களுக்காக கதறி அழுது ஜெபித்தார்,  1 )  ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும் 2) அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும் பிரியமானவர்களே, கர்த்தருடைய கரம் மாத்திரமே தன்னை இயறகை அழிவுகளுக்கும், தீய சக்திகளுக்கும், தீய மனுஷர்களுக்கும் பாதுகாக்கும் என்று அவர் விசுவாசித்திருந்தார்,  அதனால் தான் அவர்   “ உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும்,    மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித்

Proclaim the name of the Lord God over all the earth (UK Lockdown - Day 101)

And in that day you will say: Praise the Lord, call upon His name; Declare His deeds among the peoples, Make mention that His name is exalted. Sing to the Lord, For He has done excellent things; This is known in all the earth (Is 12:4-5)

தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை பூமியெங்கும் பிரஸ்தாபப் படுத்துங்கள் (UK Lockdown - Day 101)

கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள், கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள். (ஏசா 12: 4-5) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவன் இயேசு கிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் அவருடைய நாமத்தை துதித்து, அவரைத் தொழுது கொள்ளுவோதோடு, அவருடைய  சுவிஷேகத்தை அவரை அறியாத ஒவ்வொரு ஜனங்களுக்கும் சந்தோஷமாய் அறிவிவிக்க வேண்டும், மற்றும் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்த மகத்துவமான காரியங்களை சாட்சியாக ஜனங்களுக்கு அறிவித்து, அவருடைய நாமம் உயர்ந்தது என்று ஜனங்கள் மத்தியில் பிரஸ்தாபம் பண்ண வேண்டும். அல்லேலூயா !  தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

God who works behind the scene (UK Lockdown - Day 100)

Clearly, you are a God who works behind the scenes, God of Israel, Savior God.

திரைக்குப் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டு செயல்படும் தேவன் (UK Lockdown - Day 100)

இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர் (ஏசா 45:15) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, ஏசாயா தீர்க்கதரிசி இங்கே தேவனை குறித்து ஒரு சத்தியத்தை வெளிப்படுத்துகிறார் “இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்“ என்று.  ஆம் பிரியமானவர்களே, ஏசாயா தீர்க்கதரிசி சொல்லுகிற பிரகாரம்  நாம் ஆராதிக்கின்ற நம்முடைய ஆண்டவர் “திரைக்குப் பின்னால் மறைந்திருந்து கிரியைகளை நடப்பிக்கின்ற தேவனாக இருக்கின்றார்”  அல்லேலூயா !  பிரியமானவர்களே, அன்று இஸ்ரவேல் ஜனங்கள் நெருக்கத்திலிருந்த போது மறைந்திருந்து கிரியைகளை நடப்பித்து அவர்களுக்கு ஜெயத்தைக் கொடுத்த தேவன் இன்றும் நம்முடைய வாழ்க்கையில் அவ்வாறே செயல்படுகிறார், திரைக்குப் பின்னால் மறைந்திருந்து மனுஷர்களை, அதிகாரிகளை கருவியாக பயன்படுத்தி அவர்கள் மூலமாய் கிரியைகளை நடப்பித்து