Posts

The Lord who delivers you in six troubles and protects you from evil (UK Lockdown - Day 69)

He shall deliver you in six troubles, Yes, in seven no evil shall touch you (Job 5:19)

ஆறு இக்கட்டுகளுக்கு உங்களை நீங்கலாக்கி ; பொல்லாப்பு உங்களை தொடாத வண்ணம் பாதுகாக்கும் கர்த்தர் (UK Lockdown - Day 69)

Image
(கர்த்தர்) ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது (யோபு 5:19) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, யோபுவின் பாவமே அவர் இப்போது இருக்கும் நிலைமைக்கு காரணம் என்று யோபுவை குற்றம் சுமத்தின அவருடைய  சிநேகிதனான எலிப்பாஸ் [வேதம் சொல்லுகிறது “இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை” (யோபு 2 : 10 )] “ கர்த்தர் ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது” என்று சில ஆறுதலான வார்த்தைகளையும் பேசி இங்கே யோபுவை ஆற்றித் தேற்றுவதை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. அல்லேலூயா !  ஆம் பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய எங்களுக்கும் வாழ்க்கையில் யோபுவைப் போல உபத்திரவங்கள் வரலாம், துன்பங்கள் வரலாம், பாடுகள் வரலாம், ஆகவே இவ்வாறான நாட்களில் யோபுவின் சிநேகிதர்களைப் போல் நாங்களும் மற்றவர்களைப் ...

The blessings which God gives to his children (UK Lockdown - Day 68)

You shall know that your tent is in peace, you shall visit your dwelling and find nothing amiss (Job 5:24)

கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளுக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்கள் (UK Lockdown - Day 68)

Image
உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர் (யோபு 5:24) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். மேலே கூறப்பட்டுள்ள வசனத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க விரும்புகின்றேன்,  1 . உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்  2 .  உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர் 1 . உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்  இதன் அர்த்தம் : ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசித்து அவரை  ஆண்டவராகவும், இரச்சகராவும் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் ஏற்றுக் கொண்டு அவரை  மெய்யாகவே முழு இருதயத்தோடும், முழு பலத்தோடும் சேவிக்கும் அவருடைய பிள்ளைகளாகிய உங்களுடைய கூடாரத்தில் (வீட்டில்) அதாவது உங்களுடைய குடும்பத்தில் கர்த்தருடைய நிரந்தரமான மெய்யான சமாதானமும், நிம்மதியும், மகிழ்ச்சியும், சந்தோஷம...

The Lord is our strength, and saving refuge (UK Lockdown - Day 67)

The Lord is their strength, And He is the saving refuge of His anointed (Ps 28:8)

கர்த்தர் நமது பெலனும், அரணான அடைக்கலமுமாயிருக்கிறார் (UK Lockdown - Day 67)

Image
கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர் (சங் 28:8) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வசனத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க விரும்புகின்றேன்.  பிரியமானவர்களே, கர்த்தர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை இரச்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக் கொண்ட ஜனங்களுக்கு, கர்த்தர் இயேசு கிறிஸ்து  1 .  பெலனாக இருக்கிறார்  2 . அரணான அடைக்கலமாக இருக்கிறார் அல்லேலூயா !  பிரியமானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே  நமக்கு பெலனாகவும், அரணான அடைக்கலமாகவும் இருக்கும் போது நாம் எதுக்கு நமக்கு எதிரிடையாக இருக்கும் சூழ்நிலையைப் பார்த்து பயப்பட வேண்டும், கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார். அல்லேலூயா ! தாவீதுக்கு அவருடைய ஆபத்து வேளைகளில் பெலனாகவும், அரணான அடைக்கலமாக இருந்த கர்த்தர் நிச்சயமாக அவருடை...

God who doesn’t want mankind to die in sin (UK Lockdown - Day 66)

As I live,’ says the Lord God, I have no pleasure in the death of the wicked, but that the wicked turn from his way and live (Eze 33:11) God not willing that any should perish but that all should come to repentance (2 Pet 3:9) Even so it is not the will of your Father who is in heaven that one of these little ones should perish (Matt 18:14)

பாவத்தில் மனுஷர்கள் மரிப்பதை விரும்பாத தேவன் (UK Lockdown - Day 66)

Image
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் (எசேக்கி 33:11) ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் (2  பேதுரு 3:9) ஒருவனாகிலும், கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல (மத் 18:14) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, இந்துக்களின் தேவன் கிருஷ்ணன் இந்த பூலோகத்தில் மானிடனாக பிறந்தது துன்மார்க்கனான நரகாசுரனை அழிப்பதட்க்காக என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன.  ஆனால் தேவன் இயேசு கிறிஸ்து இந்த பூலோகத்துக்கு மானிடனாக பிறந்ததன் நோக்கம் பாவிகளை / துன்மார்க்கர்களை அழிப்பதட்க்காக அல்ல அவர்களை அவர்களது பாவ வாழ்க்கையிலிருந்து இரட்சிப்பத...

All my desire is before You (UK Lockdown - Day 65)

Lord, all my desire is before You; and my sighing is not hidden from You (Ps 38:9)

என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது (UK Lockdown - Day 65)

Image
ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை (சங் 38:9) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தாவீது பாடுகளுக்கூடாய் கடந்து சென்ற போது அவர் கர்த்தருடைய சமூகத்தில் தன்னுடைய பாரங்களை விசுவாசத்தோடு இறக்கி வைக்கிறார். அவர் சொல்லுகிறார் “ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை” என்று. அல்லேலூயா !  ஆம் பிரியமானவர்களே, கர்த்தருக்கு மறைவானது என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை, சகலதும் அவருக்கு முன்பாக நிர்வாணமாய் இருக்கின்றது, இங்கே தாவீதின் தவிர்ப்பும், அவருடைய தேவைகளும் கர்த்தருக்கு மறைவாயிருக்கவில்லை, கர்த்தர் சகலத்தையும் அறிந்திருந்தார், தாவீதுக்கு எதை எப்போது கொடுக்க வேண்டும் என்பதையும் கர்த்தர் அறிந்திருந்தார். அல்லேலூயா !  பிரியமானவர்களே, நீங்களும் தாவீதை போல் உங்களுடைய அங...

The Lord will be a light to me (UK Lockdown - Day 64)

Do not rejoice over me, my enemy; when I fall, I will arise; when I sit in darkness, The Lord will be a light to me (Mic 7:8)

கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் (UK Lockdown - Day 64)

Image
என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் (மீகா 7:8) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, கர்த்தருடைய பிள்ளைகளாகிய உங்களுக்கும், எனக்கும்  எதிராக இன்று பிசாசானவன் செயல்பட்டு வருகிறான், அவனது நோக்கமே எங்களை  கர்த்தரிடம் இருந்து பிரித்து வாழ்க்கையில் வீழ்த்துவதே, அவன் நாங்கள் எப்போது விழுந்து போவோம் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கிறான்.  பிரியமானவர்களே, நீதிமான் 24:16 இவ்வண்ணமாய் சொல்லுகின்றது “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்” என்று. ஆகவே பிரியமானவர்களே வீழ்ந்து விட்டேனே என்று சோர்ந்து போகாதீர்கள், கர்த்தருடைய பிள்ளைகள் வாழ்க்கையில் ஒரு போதும் தோற்றுப் போவதில்லை. அல்லேலூயா! ஆகவே பிரியமானவர்களே, சூழ்நிலை உங்களுக்கு விரோதமாக இருக்கும் போது இன்றையிலிருந்து அவிசுவாச வார்த்தைகளை பேசுவதை நிறுத்தி விட்டு கர்த்தர் இயேசு உங்களுக்கு கொடுத்திருக்...
Indeed My hand has laid the foundation of the earth,And My right hand has stretched out the heavens; when I call to them, They stand up together [in obedience to carry out My decrees] (Isa 48:13)

நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும் (UK Lockdown - Day 63)

Image
என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும் (ஏசா 48:13) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, “என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்“ என்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் கூறுவதன் மூலமாய் தான் சர்வ வல்லமை நிறைந்தவர் என்றும் தன்னால் செய்ய முடியாத காரியம் என்று ஒன்றுமில்லை, தான் வானத்தையும், பூமியையும் அதில் உள்ளவை யாவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்பதை அவர் அவர்களுக்கு தெளிவுபடுத்துகிறார். அல்லேலூயா !  ஆம் பிரியமானவர்களே, நம்முடைய சூழ்நிலை நமக்கு நேர் எதிரிடையாக இருந்தாலும்  கர்த்தர் தம்முடைய கரத்தை நம்மேல் நீட்டிருக்கும் போது நாம் எதைக் குறித்தும் சிந்திக்கவோ, பயப்படவோ, கலக்கம் அடையவோ வேண்டி...

Let us not love in word or in tongue, but in deed and in truth (UK Lockdown - Day 62)

My little children, let us not love in word or in tongue, but in deed and in truth (1 Joh 3:18)

வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூர வேண்டும் (UK Lockdown - Day 62)

Image
என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம் (1 யோவா 3:18) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, நாம் மற்றவர்களிடத்தில் அன்பு கூறும் போது வசனத்தினாலும், நாவினாலும் அன்பு கூர்ந்தால் போதாது, அவ்வாறு வாயின் வார்த்தையினாலும், நாவினாலும் மாத்திரம் பிறரிடத்தில் அன்பு கூறுவது இயேசுவின் அன்பல்ல, நம்முடைய கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூர வேண்டும். அதுவே இயேசுவின் அன்பு. அல்லேலூயா ! தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Bear one another’s burdens, and so fulfill the law of Christ (UK Lockdown - Day 61)

Bear one another’s burdens, and so fulfill the law of Christ (Gal 6:2)

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமப்பதே கிறிஸ்துவின் பிரமாணம் (UK Lockdown - Day 61)

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் (கலா 6:2) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறை வேற்ற வேண்டும் என்று வேதம் நமக்கு ஆலோசனை கூறுகின்றது. அல்லேலூயா !  ஆம் பிரியமானவர்களே, கிறிஸ்துவின் பிரமாணம் அன்பின் பிரமாணம். கிறிஸ்துவினுடைய சீஷர்களாகிய நாம் அவருடைய அடிச் சுவடுகளை பின்பற்ற வேண்டும். அடுத்தவர்கள் பாடுகளுக்கூடாய், வேதனைகளுக்கூடாய் கடந்து செல்லும் போது தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அவர்கள் அனுபவிக்கும் பாடுகளை கண்டும் காணாதவர்களைப் போல் இருந்து விடாமல், அவர்களை அன்போடும், கருசனையோடும் விசாரித்து நம்மால் முடிந்த அளவு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து இயேசு கிறிஸ்துவினுடைய  பிரமாணமாகிய அன்பின் பிரமாணத்தை நிறை வேற்ற வேண்டும். அல்லேலூயா !...

The Lord who looks down and sees from Heaven (UK Lockdown - Day 60)

My eyes flow and do not cease, without interruption, Till the Lord from heaven looks down and sees (Lam 3:49-50)

பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்க்கும் கர்த்தர் (UK Lockdown - Day 60)

Image
கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும் (புல 3:49) என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது (புல 3:50) ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனங்களை இன்றைய தினத்தில்  தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, யூதா ஜனங்கள் அந்நிய தேசத்தில் சிறைக் கைதிகளாக இருந்த போது அவர்களுடைய இருதயம் கவலையினாலும், கண்ணீரினாலும் நிறைந்திருந்தது, இந்த சூழ்நிலையில் தான் கர்த்தருடைய தீக்கதரிசியான எரேமியா "கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும் என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது" என்று சொல்லுகிறார். ஆம் பிரியமானவர்களே, அன்று யூதா ஜனங்கள் இருந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் தான் இன்று இந்த பூலோகத்தில் வாழும் நாம் ஒவ்வொருவரும் கொள்ளை நோயாகிய கொரோனா நிமித்தம் நம் எல்லாருடைய இருதயமும் பயத்தினாலும், திகிலினாகிலும், துக்கத்தினாலும் நிறைந்திருக்கிறது.  பிரியமானவர்களே, கர்த்தருடைய சமூகத்தில் நாம் இடைவிடாமல் அவருடைய  இரக்கங்களுக்...